சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்

புனே மற்றும் கொல்கத்தாவில் அமைந்திருப்பது போல சேட்டிலைட் நகரம் ஒன்றை சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் உருவாக்க மாநில திட்டமிடல் துறை திட்டமிட்டு இருக்கிறது. சென்னை பெருநகர அபிவிருத்தி அதிகாரசபை, சேட்டிலைட் நகரத்தை உருவாக்கும் திட்டத்திற்கான வரைவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 500 முதல் 1000 ஹெக்டேர் அளவுக்கு சேட்டிலைட் நகரை உருவாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

விரிவான நகர்ப்புற திட்டமிடலுக்காக மக்களிடமிருந்து பெருமளவுக்கு நில அளவை மாநில அரசால் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இந்த நில அளவையானது 2012 – 2013 ஆம் ஆண்டில் நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைகளின் படி கையகப்படுத்தப்படும். அதன்படி நிலத்தை வழங்கும் பொது மக்களும் இந்த திட்டப்பணியில் ஒரு பங்குதாரராக சேர்த்துக்கொள்ள படுவார்கள்.

அரசு நிறுவனம் , பெரு நிறுவனம் அல்லது நம்பிக்கையான முன்மாதிரிகளிடம் ஒப்படைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசு சிந்தித்து வருகிறது. நில பற்றாக்குறை பெருமளவில் இருப்பதால் விவசாயிகளோடும், நில உரிமையாளர்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் பங்குதாரர்களாக இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசீலக்கப்படும்.

 

சேட்டிலைட் நகரம் என்றால் என்ன?

பெருநகரங்களின் நெரிசலைக் குறைப்பதற்காக, அதன் அருகிலேயே தன்னிறைவுள்ள மற்றுமொரு சிறிய நகரை உருவாக்குவதே சேட்டிலைட் நகரம் ஆகும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1972ல், 178 ஏக்கர் பரப்பளவில் சேட்டிலைட் நகரம் ஒன்றை மறைமலை நகருக்கு அருகே உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டதால் அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. அதே போல தொன்னூறுகளில் வட சென்னை அருகே ஒரு சேட்டிலைட் நகரம் உருவாக்கும் திட்டமும் எந்த காரணமும் சொல்லாமல் கைவிடப்பட்டது.

தமிழக அரசு சென்னையில் இரண்டாவது விமான நிலையை ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய அரசு உத்தேசித்துள்ளது.

Related Articles

சன்னி லியோன் என்ன சாதி? – இந்தச் ச... அடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...
இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...
உங்களுக்கு விருப்பமான ஐபிஎல் வீரர்களை நீ... ஒவ்வொரு ஆண்டும் கோடை காலங்களில் கிரிக்கெட் விரும்பிகளுக்குக் கொண்டாட்டம் தான். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியர்களின...

Be the first to comment on "சென்னைக்கு அருகே சேட்டிலைட் நகரம் உருவாக்க திட்டம்"

Leave a comment

Your email address will not be published.


*