ஆந்திர பிரதேச கோயில்களில் திருடுப் போகும் பக்தர்களின் தலைமுடிகள்! – தலைமுடிக்கும் தனி மதிப்பு உண்டு!

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான திருப்பதி கோயிலில் உள்ள தலை  முடிகள் பல கோடிகளுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. திருப்பதியில் ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கில் பக்தர்கள் முடி காணிக்கை செய்கிறார்கள். அது கோவில் நிர்வாகத்தால் சேகரிக்கப் பட்டு நல்ல விலைக்கு ஏலம் விட்டு கோவில் வருமானத்தை கோடிகளில் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதே போல ஆந்திராவின் மற்றபிற பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களின் காணிக்கை முடிகள் அவ்வப்போது திருடுப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

 

தலைமுடிக்கு தனிமதிப்பு

உலக அளவில் இந்த தலைமுடி வியாபாரம் பிரபலமாக உள்ளது. அப்படி தலைமுடி வியாபாரம் அதிக அளவில் செய்வதில் இங்கிலாந்து முதல் இடமும், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கின்றன. 1960ம் ஆண்டிலிருந்து தலைமுடி ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா. அதிலும் குறிப்பாக திருப்பதியில் இருந்துதான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் திருப்பதி கோவிலில் உள்ள பக்தர்களின்  நீள முடி 1 கிலோ 8,500 ரூபாய்க்கும், குட்டை முடி 1 கிலோ 50 ரூபாய்க்கும் வியாபாரம் ஆகிறது.

இந்த தலைமுடிகளையும் சில நிறுவனங்கள் விலைக்கு வாங்கி பதப்படுத்தி அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு நானூறு கோடிக்கும் மேல் இந்தியாவிற்கு வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தலைமுடிகளை வைத்து  அமினோ அமிலங்கள் உற்பத்தி செய்யலாம் என்பதாலும் கேன்சர் நோயாளிகளுக்கு இது பேருதவி புரியும் என்பதாலும் முடியின் விலை உயர்ந்து கொண்டு இருக்கிறது. தலைமுடிகளில் இரண்டு வகை முடிகள் வியாபாரத்திற்கு என்று உள்ளது. ஒன்று முழுவதுமாக கோவில்களில் கிடைக்கும் முழுநீள முடிகள். மற்றொன்று வீடு வீடாகச் சென்று குரவர்கள் சேர்க்கும் அரைகுறை முடிகள்.இவற்றில் கோவில் முடிகளுக்கே அதிக மதிப்பு.

இங்கே எத்தனை பேர், நடிகர் விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை படம் பார்த்திருக்கிறீர்கள். அதில் தலைமுடி வியாபாரம் பற்றி சில கட்சிகள் இருக்கும். அந்தப் படத்தை பார்த்தால் இந்தக் காட்சியை கூர்ந்து கவனியுங்கள். இங்கு எல்லாவற்றிலும் காசு இருக்கிறது என்பது புரியும்.

Related Articles

பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லை ... ஜம்முவில் பாகிஸ்தான் படை வீரர்களின் குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் உயிர் இழந்தனர். எல்லை பாதுகாப்பு கோட...
லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்த படைப... கலை என்பது வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக, பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல்  சமூக பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இயக்க...
தல அஜீத்தை பற்றி அட்லீ என்ன சொன்னார்? &#... அக்டோபர் 24ம் தேதி மாலையில் #askatlee என்று டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார் அட்லீ. அப்போது ரஜினி...
இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்... இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர். படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கி...

Be the first to comment on "ஆந்திர பிரதேச கோயில்களில் திருடுப் போகும் பக்தர்களின் தலைமுடிகள்! – தலைமுடிக்கும் தனி மதிப்பு உண்டு!"

Leave a comment

Your email address will not be published.


*