அபராத தொகையை இனி ஆன்லைன் கட்டணமாக மட்டும் செலுத்த முடியும் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் இனி போக்குவரத்து காவலர்களிடம் செலுத்த வேண்டிய அபராத தொகையை ஆன்லைன் கட்டணமாக மட்டுமே செலுத்த முடியும். கட்டணத்தைக் கடன் அட்டை, பற்று அட்டை, பேடிஎம் போன்ற இ-வாலட்டுகளின் மூலமும் செலுத்தலாம்.

போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஏ. அருண் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது ‘வாகன ஓட்டிகள் இனி அபராத தொகையை பணமாகப் போக்குவரத்து காவலர்களிடம் தரக்கூடாது. போக்குவரத்து காவலர்கள் யாராவது பணமாக அபராத தொகையை கட்டச் சொல்லி கேட்டால் அது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.’

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரிசோதனை முயற்சியாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நேற்று முதல் இந்தத் திட்டம் முழுவதுமாக சென்னை மாநகரில் பின்பற்றப்படுகிறது.

 

அபராத தொகையை பணமாகச் செலுத்தும் வழிமுறைகள்

அபராத தொகையை பணமாகச் செலுத்த விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சலகத்திலோ அல்லது இ-சேவா மையங்களிலோ செலுத்தி ரசீது பெற்று அதை நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் அருகில் உள்ள போக்குவரத்து அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் சம்மன் அனுப்பப்படும், அப்படியும் கட்டாதவர்களுக்கு வாரண்ட் அனுப்பப்படும்.

உணவகங்களில் அட்டையைத் தேய்த்து பணம் செலுத்துவதை போலவே இனி அபராத தொகையையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட... அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்... தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?...
மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வ... மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அத...
இந்திய கல்விமுறை குறித்து நடிகர் சூர்யாவ... முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்? மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக...
” கடவுள் ஒரு சில்றபையன் ” &#... எட்டு வருடங்களுக்கு முன்பு ஆரண்ய காண்டம் எனும் படத்தை தந்தவர். அதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.பசுபதி, சிங்கப் பெருமா...

Be the first to comment on "அபராத தொகையை இனி ஆன்லைன் கட்டணமாக மட்டும் செலுத்த முடியும் – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிமுகம்"

Leave a comment

Your email address will not be published.


*