1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பு

1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலைகள் மீட்கப்பட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவியின் இந்தச் சிலைகள் வரலாற்றில் பதிவான அவர்களது ஒரே சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத்தின் காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்து சிலைகளை தமிழ்நாட்டின் சிலை மீட்பு பிரிவினர் மீட்டனர். மூன்று நாட்களுக்குள் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என்று தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் வி.வி. ஸ்வாமிநாதன் இந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காணாமல் போன வெண்கல சிலைகளை மீட்குமாறு தமிழ்நாடு சிலை மீட்பு பிரிவினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. முன்னதாக பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு சிலை மீட்பு பிரிவினர் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து இருந்தனர்.

 

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன் மாணிக்கவேல் தலைமையில் விசாரணை

காவல்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்பு குழு, கௌதம் சாராபாய் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் விசாரணை நடத்தி சிலைகளை மீட்டது. சிலைகளின் மதிப்பு முறையே ரூ 60 கோடி மற்றும் ரூபாய் 40 கோடி இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

ராஜ ராஜ சோழனின் இருபத்து ஒன்பதாவது ஆண்டு ஆட்சியில் கொடம்பலரின் தலைவன் 13 வெண்கல சிலைகளை கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கினான்.  அதில் ராஜ ராஜ சோழன்  மற்றும் லோகமாதேவின் சிலைகளைத் தவிர, மற்ற 11 சிலைகள் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

கும்பகோணம் அருகே உள்ள பாண்டநல்லூர் கிராமத்தில் பசுபதிதேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களின் பார்வைக்கு  இந்த ஆண்டு பிப்ரவரியில் 107 பழங்கால சிலைகள் வைக்கப்பட்டன. கும்பகோணத்தில் உள்ள நாகேஷ்வரஸ்வாமி கோவிலில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் பாண்டநல்லூர் கிராமத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, தங்கள் கோவிலுக்கு சொந்தமான சிலைகளை அடையாளம் காணும் பணி,  தமிழ்நாடு சிலை மீட்பு குழுவின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

Related Articles

உங்களுக்குத் தரப்படும் மருந்துகளில் 10% ... எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போன பிறகும் கூட ஒரு சாமானியன் சிறிய வைராக்கியத்துடன் சென்று சேரும் இடங்கள் இரண்டு. ஒன்று கோவில், அது ஒரு வழிப் பாதை. அங்க...
இவர்களில் “பொன்னியின் செல்வன̶்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில...
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது... 43வது சென்னை புத்தக திருவிழா 2020ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. தொடங்கி வைக்க தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வந்தார். அடுத்த வருட புத்தக திர...
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மே மாதம் ... சர்வதேச அரசியலின் மிக முக்கிய செய்தியாக தற்போது விவாதிக்கப்பட்டு வருவது, வரும் மே மாதம் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்தித்து...

Be the first to comment on "1000 ஆண்டுகள் பழமையான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பு"

Leave a comment

Your email address will not be published.


*