தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!

tamil bus

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 18-ல் பேருந்து கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது.
அதையடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பேருந்து கட்டண உயர்வுக்கான
அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கட்டண உயர்வுக்கான காரணம்?

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 22.509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களினால்
கூடுதல் செலவு ஏற்படுவதால் பேருந்துகளை முறையாக இயக்குவதற்கு தேவையான வருவாய்
ஈட்ட முடியவில்லை என்பதாலும் பேருந்துகளை பராமரிக்க இயலவில்லை என்பதாலும், இயக்க
செலவுகளைக் காட்டிலும் வருவாய் குறைவாக இருப்பதால் நாளொன்றுக்கு ஒன்பது கோடி
நஷ்டம் ஏற்படுவதாலும் பேருந்து கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு தமிழக
அரசு தள்ளப்பட்டுள்ளது.

சென்னை நீதிமன்ற இடைக்கால உத்தரவு!

கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில்
நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோரைக் கொண்ட அமர்வு, “தற்போதுள்ள
கட்டணம், இயக்கச் செலவுகளைக்கூட சந்திக்க போதுமானது அல்ல. அரசிடம் இருக்கும் நிதி
ஆதாரங்களை ஒப்பிடும்போது பராமரிப்புச் செலவு, கடன், இழப்பு, இதர பொருளாதாரக்
காரணிகள் உயர்வாகவே உள்ளன. எனவே, “பயணிகளுக்கு சுமையாக இருந்தாலும் கட்டண
உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது” . போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்படுவது,
அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தது. எனவே ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி
உத்தரவிடுகிறோம்" என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான முடிவு மக்களுக்கு உகந்ததா?

பேருந்து கட்டணம் உயர்வு குறித்த அரசு அறிவிக்கையின் படி பேருந்து கட்டணம் ஐம்பது முதல்
அறுபது சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் அன்றாடம் பேருந்து மூலமாக பொது
போக்குவரத்து மேற்கொள்ளும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். “ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்
ஏத்துனா பரவால… ஒரேயடியா டபுள் ரேட்டுக்கா டிக்கெட் விலைய ஏத்துறது… என்னம்மோ
போ… ” என்று தலையில் அடித்துக்கொண்டு புலம்புகின்றனர். இவர்களிடம் மாட்டிக்கொண்டு
வழி நடத்துனர்கள் படாதபாடு படுகிறார்கள். அரசு விலை உயர்த்தியதற்கு இவர்களை திட்டி
என்ன பயன்? சமூகவலைதளங்களிலும் இளைஞர்கள், தங்கள் பேருந்தில் பயணித்த போது எடுத்த டிக்கெட்டை புகைப்படம் எடுத்து, “என்னங்கடா… திருப்பி திருப்பி எங்களையே அடிக்குறிங்க… சாமான்ய மக்கள் வாழ முடியாது போல… ” என்று புலம்பி வருகின்றனர். போக்குவரத்துகழக ஊழியர்கள் போராட்டத்தின் போதும், பேருந்து கட்டண உயர்வின் போதும் அதிக பாதிப்பு பொதுமக்களுக்கு தான்.

Related Articles

“இன்றைய காந்திகள்” – ப... குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்து...
தேவராட்டம் மட்டுமல்ல எல்லா படத்தலயும் சா... புதிய தலைமுறையின் பொருள் புதிது நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா கேள்வி கேட்ட மதன் ரவிச்சந்திரன்கேள்வி 1 : தேவராட்டம் படம் எப்படி வந்திருக்கு...???...
செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப... Nomophobia (No mobile phobia) என்ற புது விதமான மன நோய்,  இப்போது உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்த மாதிரியான மனநோய் குறைபாடு உள்ள குழந்தை...
தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...

Be the first to comment on "தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டண உயர்வு! – மக்கள் அதிருப்தி!"

Leave a comment

Your email address will not be published.


*