தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்

MP villagers deprived of water for 3 years, walk 5 km to get it

மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத்தில் கோடை காலத்தில் தண்ணீர் கிடைப்பது அரிதிலும் அரிதான ஒன்றாக இருக்கிறது.

3000 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பெரும்பாலனோர் பண்ணை தொழிலாளர்களாகவும், சிறு வணிகர்களாகவும் இருக்கிறார்கள். தினமும் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு நடந்து சென்று அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் எடுத்து வரும் அவலச் சூழல் அந்தக் கிராமத்தில் நிலவி வருகிறது.

அந்தக் கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

‘உத்திர பிரதேசத்து எல்லை வரை சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. எங்கள் குழந்தைகள் இதனால் பள்ளிக்கூடங்களுக்குச் செல்வதே இல்லை.தினமும் அவர்கள் எங்களுடனேயே தண்ணீர் எடுக்க வந்து விடுகிறார்கள். காடுகளுக்கு இடையே நடந்து சென்று பெண்கள் தினமும் தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.’ என்று கிராம வாசிகள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் கோரிக்கைகள் நிராகரிப்பு

‘மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை நிராகரித்து வருகிறார்கள்’ என்று கிராம வாசிகள் மேலும் தெரிவித்தனர்.

தண்ணீர் பிரச்சனை மட்டுமல்லாமல் சாலை, மின்சாரம் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் கூடக் கிராம வாசிகள் அவதியுறும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும்.

Related Articles

மாவட்ட வாரியாக தமிழ் மற்றும் மலையாள எழுத... தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவற்றில் சில எழுத்தாள...
2018ல் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டன்ட் ... கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தது. இன்று மீம் என்பது கலை வடிவமாகப் பார்க்கப் படுகிறது. பல சமூக மாற்றங்களும் சி...
கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் &... சட்டம்நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர்.இயக்கம்: கே.விஜயன்இசை:...
அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இ... ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும...

Be the first to comment on "தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மத்திய பிரதேச கிராமம்"

Leave a comment

Your email address will not be published.


*