கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந்தது மகாராஷ்ட்ரா சிறை நிர்வாகம்

தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்து சிறை வாழ்வை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்த அரசு சார்பிலும், தனியார் அமைப்பு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறையில் இருந்துகொண்டே தடைப்பட்ட படிப்பைத் தொடர்வது, கைதிகளுக்கு யோகா கற்றுத்தருவது எனப் பல முன்னுதாரணங்களைச் சொல்லலாம். அதன் ஒருபகுதியாக மஹாராஷ்ட்ரா மாநிலம் அகமதுநகர் சிறையில் கைதிகளுக்காக உள் வானொலி நிலையம் ஒன்றை அமைத்துத் தந்திருக்கிறது சிறை நிர்வாகம்.

 

கைதிகளால், கைதிகளுக்காக ஒரு வானொலி நிலையம்

மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறையில் கைதிகளுக்காக, கைதிகளே நடத்தும் ஒரு உள் வானொலி நிலையம் அமைத்துத் தந்திருக்கிறது அகமதுநகர் சிறை நிர்வாகம்.

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் என்.எஸ்.சவந்த் பேசுகையில் ‘தங்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்பது, சுகாதாரம் மற்றும் ஆன்மீக பாடல்களை ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்வதற்காக  ஒவ்வொரு பட்டயத்திலும் ஒலிபெருக்கிகள் நிறுவப்பட்டு இருக்கின்றன.’கைதிகளின் மனதை எதிர்மறையில் இருந்து திசை திருப்ப மற்றும் அவற்றை நேர்மறையான பாதையைத் தேர்வு செய்ய உதவுவதற்கு இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,” என்று மூத்த ஜெயிலர் ஷாம்கந்த் சேட்ஜ் கூறினார்.

Related Articles

தமிழகத்தின் தற்போதைய சூழலுக்கு தகுந்த பட...  தயாரிப்பு: பென் ஸ்டுடியோஸ் & ஸ்டோன் பெஞ்ச்இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ்இசை: சந்தோஷ் நாராயணன்ஒளிப்பதிவு: திருஎடிட்டிங்: ...
கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்ப... திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிர...
நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் கத்தியுடன்... கடந்த இரண்டு நாட்களாக நியூஸ் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த பேரிகார்டு பீட்டரின் பெயர் அடிக்கடி கண்ணில் படுகிறது. யார் அந்த பிரபலம்? புத்தா...
எதிர்பார்ப்பை கிளப்பிய வசந்த் ரவியின் ரா... இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வசந்த் ரவி. அவருடைய இரண்டாவது படத்தில் (ராக்கி) இயக்குனர் இமயம் பாரதிராஜாவோடு இணைந்த...

Be the first to comment on "கைதிகளுக்காக வானொலி நிலையம் அமைத்துத் தந்தது மகாராஷ்ட்ரா சிறை நிர்வாகம்"

Leave a comment

Your email address will not be published.


*