பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்தகம் ஒரு பார்வை!

A View on the book Mayiliragu Kutti Potathu written by Prapanchan

புத்தகம் : மயிலிறகு குட்டி போட்டது

வகை : கட்டுரைத் தொடர் (புதிய தலைமுறை)

ஆசிரியர் பற்றி…

இயற்பெயர் : சாரங்கபாணி வைத்திலிங்கம்

பிறந்த இடம் : புதுச்சேரி

மனைவி : பிரமிளா ராணி

பிள்ளைகள் : கௌதமன், கௌரி சங்கர், சதீஷ்

விருதுகள் : புதுச்சேரி அரசு தமிழக அரசுப் பரிசுகள் இருமுறை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் விருது, மேற்கு வங்க பாரதிய பாஷா பரிட்சத் பரிசு, சாகித்திய அகாதெமி பரிசு.

நூலைப் பற்றி…

ஊர் என்கிற கருப்பை, அப்பா என்கிற இலட்சியம், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, என்னைக் கண்டுபிடித்த குரு, கம்யூனிஸ்ட் பத்திரிக்கையில் எழுதறானே, என் வாகனம் சைக்கிள், எந்தரோ மகானுபவ, என் மக்கள் பணி, சினிமா எனும் மாய லோகம், கதை பிறந்த கதை, முத்தம் கொடுத்து பசியாற முடியாது, ஓர் அதிகார வர்க்க நண்பன், ஊர் சுற்றிகளே ஞானவான்கள், திண்ணை தமிழர்களின் வரவேற்பறை, புத்தகத்துக்கு வெளியே ஒரு மனிதர், அந்தக் கடைசி நாள், பச்சை வயலில் நீர் பாய்ச்சி, இவர்கள் இப்படித்தான், உள்ளங்கையில் பெய்த அமுதம், இரண்டு மனித உயிர்கள், ஆகச் சிறந்த பரிசும் விருதும், ரத்தம் ஒரே நிறம், நான் பொன்முடிப்பு பெற்ற கதை, மயிலிறகு குட்டி போட்டது, என் தலைவர் என்று 25 தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ளார்.

“இந்துக் கடவுளர்களுக்கு வாகனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. பிள்ளையாருக்கு மூஞ்சூறு, சிவனுக்கு காளை, முருகனுக்கு மயில், குபேரன் பணக்காரன். அவன் வாகனம் மனிதன். நரவாகனன் என்பது அவன் பெயர்களில் ஒன்று. பணம் மனிதனையே வாகனப்படுத்தி விடுகிறது. எனக்கு சைக்கிள் மட்டுமே வாகனமாக இருந்தது. ” போன்ற தன் வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு தலைப்பும் ” சங்கீதம் பற்றிய இரண்டு நாவல்கள் அருமையான இரண்டு படைப்புகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஒன்று ஜானகிராமனின் மோகமுள். மற்றது சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம். ” போன்ற சுவாரஸ்யமான தகவல்களை கொண்டுள்ளன.

176 பக்கங்கள் உடைய இந்தப் புத்தகத்தின் விலை 130 மட்டுமே. நற்றிணை பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

 

Related Articles

ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்! ... இயக்குனர் மணி ரத்னம் மற்றும் இயக்குனர் ஏர்.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து லக்ஷ்மி, மா என்று இரண்டு குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவன...
அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
மார்ச் 8 – 5 years of நிமிர்ந்து ந... * "சிலையும் நீயே சிற்பியும் நீயே, உன்னை நீ சரிசெய்துகொள்... உலகம் தானாக சரியாகி விடும்... " * " ஒழுக்கம், உண்மை, நேர்மை, பெரியவங்கள மதிக்...

Be the first to comment on "பிரபஞ்சனின் மயிலிறகு குட்டி போட்டது புத்தகம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*