உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!

ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் என செல்பி பைத்தியங்களுக்கு செக் வைத்து உள்ளது.  அந்த அளவுக்கு செல்பி மோகம் பிடித்தவர்களாக மாறிவிட்டோம். செல்பி எடுப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது ஒருபுறமிருக்க ஒரு நாளைக்கு அதிக தடவை செல்பி எடுப்பதால் அது அவர்களை அறியாமலே ஒரு மனநோயாக மாறிவிடுகிறது.

உலக அளவில் செல்பி எடுப்பதன் மூலம் உயிரிழப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்து உள்ளதாக pittsbergh university மற்றும் இந்திரபிரசாத் தகவல் தொழில்நுட்பம் இணைந்து நடத்திய ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. கடந்த 2014 ம் ஆண்டு முதல் உலக அளவில் பலதரப்பினர் செல்பி மோகத்தால் உயிரழிப்பவர்களின் எண்ணிக்கையும் அதற்கான காரணத்தையும் ஆராய்ந்து வருகிறது.

அப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுக்க 213 இந்தியர்கள் உயிர் இழந்து உள்ளனர். அதில் 128 பேர் இந்தியர்கள். 2014 ல் 15 இந்தியர்கள், 2015 ல் 39 இந்தியர்கள், 2016 ல் 86% ஆக உயர்ந்து 2017 ல் 73% ஆக குறைந்து உள்ளது. இப்படி இந்தியா முதலிடம் பிடிக்க, பாகிஸ்தான் இரண்டாம் இடமும் அமெரிக்கா மூன்றாம் இடமும் பிடித்து உள்ளது.

அமெரிக்கன் சைக்காட்ரியக் அசோஷியேசன் இது குறித்து ஆய்வு நடத்தி இதனை ஒரு மனநோயாளி என்றும் அதற்கு செல்பிட்டிஸ் என்ற பெயரையும் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று செல்பி எடுப்பவர்கள் இந்த நோயின் தொடக்கத்தில் இருப்பவர்களாகவும் ஆறு செல்பி எடுப்பவர்கள் அதனை மறக்காமல் பேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் பெற விரும்புபவர்களையும் மனநோயாளி என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

Related Articles

குடும்பங்கள் கொண்டாடும் எஸ் ஜே சூர்யாவின... கதை வசனம் சங்கர்தாஸ் எழுத திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒருநாள் கூத்து எனும் அட்டகாசமான படத்தை தந்தவரிடம் இருந்து மான...
கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போ... கப்பலில் 60000 யானைகளை ஏத்திட்டு போய் போர் செஞ்சாங்க என் முன்னோர்கள் என்று சீமான் சமீபத்தில் சொன்னதை அடுத்து அது எப்படி வாத்தியாரே அறுபதாயிரம் யானையைக...
கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்ப... சமீபத்தில் நடந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பராசக்தி படம் திரையிடப்பட்டது. பல ஆண்டுகள் ஆனாலும் பேசக்கூடிய வியக்ககூடிய படமாக இருக்கும் இந்தப் படத்த...
2019ல் ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் வாங... 2019ல் வெளியான படங்களில் மிக முக்கியமான படம் பேரன்பு. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் 56 மதிப்பெண்கள் தந்தது. இந்தப் படத்திற்கு ஆனந்த விகடன் விமர்சனம் ...

Be the first to comment on "உலகிலேயே அதிக “செல்ஃபி பைத்தியங்கள்” இந்தியாவில் தான் இருக்கிறது!"

Leave a comment

Your email address will not be published.


*