சாமுவேல் பால் என்ற பிரபல பொருளாதார நிபுணர் பப்ளிக் அப்பேர்ஸ் சென்டர் என்ற மையத்தை 1994ல் தொடங்கினார். நாட்டில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பாக இந்த மையம் இருந்து வருகிறது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் இருந்து வருகிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் இந்த அட்டவணை வெளியிடப் படுகிறது. இந்த வருடத்திற்கான பட்டியல் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிடப் பட்டது.
அதில் சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலமாக கேரளா முதல் இடம் பிடித்து உள்ளது. இது கேரளாவுக்கு மூன்றாவது வருடம் ஆகும். இந்த வருடத்தோடு கேரளா தொடர்ந்து முதல் இடம் பிடித்து வருகிறது.
அடுத்த இடத்தில் இருப்பது எந்த மாநிலம் என்று யூகிங்கள் பார்ப்போம். பதில் கொஞ்சம் அதிர்ச்சியான உண்மை தான். இரண்டாம் இடத்தை நமது தமிழ்நாடு மாநிலம் பிடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து தெலுங்கான மூன்றாம் இடத்தையும், கர்நாடகா நான்காம் இடத்தையும், குஜராத் ஐந்தாம் இடத்தையும் பிடித்து இருக்கிறது.
அதே போல இந்த அட்டவணையில் கடைசி இடங்களை மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் இடம் பிடித்து இருக்கிறது.
மிகச் சிறிய மாநிலங்களாக கருதப்படும் அதாவது 2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடத்தையும் கோவா, மிசோரம் போன்ற மாநிலங்கள் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் முறையே பிடித்து இருக்கின்றன. இதே போல கடைசி இடங்களை நாகலாந்து, மணிப்பூர், மேகலயா மாநிலங்கள் இடம் பிடித்து இருக்கின்றன.
Be the first to comment on "இந்திய அளவில் சிறந்த நிர்வாகம் செய்வதில் கேரள மாநிலத்துக்கு முதலிடம்!"