அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்!

தமிழகத்தில் கல்வி என்ன நிலைமையில் இருக்கிறது என்றும் அரசுப்பள்ளிகள் எப்படி இருக்கிறது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் எப்படி இயங்கி வருகிறார்கள் தற்போதைய தேர்வு விடுமுறையில் அவர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்பது பற்றி நாம் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் அரசுப்பள்ளிகள் தரம் மிகவும் குறைந்துவிட்டது எனவும்  கூடிய விரைவில் அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு வரும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளிகள் மூடப்பட மாட்டாது என்று தெரிவித்து இருந்தார். மேலும்,

விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழியாக தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அவர் உத்தரவிட்டுள்ளார்.

அவருடைய அறிவிப்பின்படி, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகை நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்களை கிராமங்களின் பொது இடங்களில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் மூலம் கூட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் குறித்து தெரியப்படுத்தி, 5 வயதுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கச் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகள் மற்றும் சுற்றுப்புற குடியிருப்புகளில் உள்ள 5 வயது குழந்தைகளைக் கண்டறிந்து விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வரும் பெற்றோரை இன்முகத்துடன் வரவேற்று, அன்றைய தினமே விலையில்லா பாடநூல், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பு: இன்முகத்துடன் வரவேற்று என்று குறிப்பிட்டுள்ளார்கள். “இன்முகம்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா அந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு.

என்ன நம்பிக்கையில் அரசு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளது. நேரடியாக அரசுப்பள்ளி ஆசிரியர் ஆசிரியையகள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்காமல் ஏன் இந்த கண் துடைப்பு வேலை. மாசம் ஐம்பதாயிரம் மேல் சம்பளம் வாங்கும் அவர்கள் பள்ளியில் வேலை செய்ய மனம் நோகிறார்கள். இந்நிலையில் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் என்ற அறிவுறுத்தலை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள். பேசாமல் TET, TRB போன்ற தேர்வுகளை நிறுத்திவிட்டு அனைத்து அரசுப்பள்ளிகளையும் இழுத்து மூடிவிட்டு அத்தனை அரசுப்பள்ளி ஆசிரிய ஆசிரியையகளுக்கும் பணி ரத்து செய்து தனியார் பள்ளிகள் திறக்க லைசன்ஸ் கொடுத்துவிட வேண்டியது தானே. ஏன் இந்த கண்துடைப்பு வேலை?

​புனிதமான ஆசிரியப் பணியை ஆத்மாத்மாக யாரும் செய்வது இல்லை. கண்ட கண்ட பரதேசிகளும், நாரச்சிகளும், ரவுடிகளும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து கொண்டு தமிழ்ச் சமூகத்தை நாசம் செய்கிறார்கள் என்பது பொதுமக்கள் பலருடைய புலம்பலாக இருக்கிறது.

 

Related Articles

மருத்துவ பரிசோதனைகள் செய்து பார்க்க குளோ... இருபது ஆண்டுகளுக்கு முன்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட டோலி என்ற ஆட்டுக்குட்டியைப் போலவே, அதே தொழில்நுட்பத்தை பின்பற்றி தற்போது சோங் மற்றும் ஹுவா...
பக்கத்துல இருக்கறவங்க மேலயும் அக்கறை காட... நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்று தற்போது திரைக்கு வந்துள்ள படம் டூலெட். இயக்குன...
காப்பான் அடுத்த அயனா அல்லது அடுத்த அஞ்சா... அயன், மாற்றான் படங்களை தந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. அந்த எதிர்பார்ப்பை காப்பான் படம் சமன் செ...
தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள்!... பரபரப்பான சீரியல்களை ஒளிபரப்புவதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய நான்கு சேனல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியல்கள் எ...

Be the first to comment on "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் மாணவ சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்!"

Leave a comment

Your email address will not be published.


*