ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !

Unpleasant experience of child labourers in textile industry

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் பண்டிகைகளை தவிர தேசிய தினங்கள் எதுவும் உண்மையாக கொண்டாடப்படுவது இல்லை.

மாணவனை கொன்று ஆசிரியர் தினமும், ஆசிரியரை குத்திக் கொன்று மாணவர் தினமும், மக்களை அடிமையாக்கி வைத்து சுதந்திர தினமும், மக்களை காசுக்கு ஓட்டு போடும் செம்மறி ஆடுகளாக மாற்றிவிட்டு தேசிய வாக்காளர் தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல குழந்தை தொழிலாளர்கள் நாடு முழுவதும் பரவிக் கிடந்தாலும் எதோ இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களே இல்லாதது போல நாடு முழுவதும் குழந்தை தொழிலாளர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.

பேக்கரி மற்றும் ஜவுளிக்கடை :

வழக்கு எண் 18/ 9 படத்தில் நாயகன் தனது குடும்பம் வட்டி கொடுமையால் வாடுவதை கண்டு பள்ளியை விடுத்து பேக்கரி ஒன்றுக்கு வேலை செல்வார். விவரம் தெரியாத சிறுவர்கள் தானே என்று அதட்டி அதட்டி வேலை வாங்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து தின்று பெருத்து போய் கிடக்கிறார்கள் முதலாளிகள். என்ன தான் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் வந்தாலும் அது பயனற்றதாவே இருக்கிறது.

ஜவுளிக்கடையில் துணியை எடுத்துக் காட்டும் இடத்தில் பெரும்பாலும் சிறுவர்களே இருக்கிறார்கள். அத்தனை பேரும் ஸ்கூல் ட்ராப் அவுட். குடும்ப வறுமை ஒருபுறம் என்றாலும் கொழுப்பு மறுபக்கம்.  சேர்க்கை அப்படி. சீக்கிரமே செல்போன் வாங்கி சீன் போட வேண்டும், சீக்கிரமே பைக் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தடாலென வேலைக்கு வந்துவிடுகிறார்கள். அதிலும் ஜவுளிக்கடையில் வேலைக்கு சேரும் சிறுவர்கள் எல்லாம் போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தவர்களோ.

காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரை என்று தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால் மாத சம்பளம் வெறும் 6000 ம் ரூபாய். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து 200 ரூபாய் சம்பளம் என்பது எவ்வளவு கொடுமையான விஷியம். இந்த இருநூறு ரூபாய்க்காக அவர்கள் எத்தனை முறை மாடிக்கும் தரைக்கும் ஏறி இறங்குகிறார்கள் ( ஒரு சில கடைகளில் மட்டுமே பணியாட்கள் லிப்ட்டில் செல்ல அனுமதிக்கிறார்கள் ) எத்தனை பேருக்கு துணி எடுத்து போடுகிறார்கள்.

இளம் வயதினர்  துருதுருவென இருப்பார்கள் என்பதால் அவர்களை வைத்து இரண்டு பெரிய ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை வாங்கிவிட்டு அரை ஆள் கூலி போட்டு தருகிறார்கள். அவர்களும் விவரம் தெரியாமல் முதலாளியிடம் வெரி குட் வாங்க வேண்டுமென்று அலைந்து திரிகிறார்கள்.

இவர்களை சொல்லி என்ன பயன் ? பெற்றோர்களை சொல்ல வேண்டும். பிள்ளைகள் பள்ளி கல்லூரி செல்லாமல் அடம் பிடிக்கிறார்கள், கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுகிறார்கள் என்பதற்காக உருப்படியாக வேலைக்காவது போகட்டும் என்று ஜவுளிக்கடை மாதிரியான நரகத்தில் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை ஓட ஓட விரட்டி முதுகு தோல் கிழிந்து தொங்கும் வரை சாட்டையால் வெளுத்து வாங்க வேண்டும்.

 

Related Articles

“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை ப... கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்...
#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்... நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி ...
மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந... வந்து விட்டது  மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) கார்!!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (M...
தைவானைத் தாக்கியது கடும் நில நடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6 .4 என்று பதிவாகி இருக்கும் நில நடுக்கம் தைவானில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு தைவானின் சுற்றுலா நகரமான ஹுவாலியனை இந...

Be the first to comment on "ஜவுளிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள் படும்பாடு – கசப்பான குழந்தைகள் தினம் !"

Leave a comment

Your email address will not be published.


*