” என்ன வேலை செய்றீங்க? ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்!

wonders of temple

வித்தியாசம், அதிசயம் என்ற வார்த்தைகளுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. ஏனென்றால் அவை தான் மனிதனை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படி சில கோயில்களின் அதிசயங்களும், சில நாடுகளின் வித்தியாசமான சம்பவங்களையும் இங்கே பார்ப்போம்.

சில கோயில்களின் அதிசயங்கள்:

காசி நகரைச் சுற்றி 45 மைல் தூரம் வரை கருடன் பறக்காது. குளித்தலை மணப்பாறை வழியில் ஐவர் மலை என்னும் இரத்தினகிரி மலை உள்ளது. இந்த மலை மேல் காகங்கள் பறப்பது இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வராது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் பதிநான்கு கோபுரங்கள் உள்ளன. வேறு எந்தக் கோயிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பது இல்லை. கும்பகோணம் திருநாகேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ ஒப்பிலியப்பன் கோவிலில் எந்த நைவேத்தியத்திலும் உப்ப சேர்ப்பதில்லை. இரத்தினகிரி கோவிலில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும்.

சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி கோவிந்தராஜ பெருமாளையும் நடராஜனையும் தரிசிக்கலாம். இதே சிதம்பரத்தில் மட்டும் தான் சைவர்களுக்கு உண்டான திருவோதிரையும் வைணவர்களுக்கு உண்டான வைகுண்ட ஏகாதசியும் ஒரே இடத்தில் நடைபெறுகிறது.

சில நாடுகளின் சில வித்தியாசமான சம்பிரதாயங்கள் பற்றி பார்ப்போம். என்ன வேலை செய்றீங்க? என்று கேள்வி கேட்பது அநாகரிகமான செயல் என்று அந்த நாட்டு சம்பிரதாயம் சொல்கிறது. சிவப்பு மையால் பெயர் எழுதுவதை கொரியாக் காரர்கள் அநாகரிகமான செயலாக கருதுகிறார்கள். அறிமுகம் இல்லாத பெண்களுக்கு உதவி செய்வதை பிலிப்பைன்ஸ்ஸில் அநாகரிகமான செயலாக கருதுகிறார்கள். தாய்லாந்து நாட்டில் தலையில் கை வைத்து வாழ்த்துவதை அநாகரிகமாக கருதுகிறார்கள். ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாக கருதப்படுகிறது. படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜெண்டினாவில் அநாகரிகமாக உள்ளது. எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பது அநாகரிகம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கையுறை அணிந்து கொண்டு கை குலுக்குவதை அநாகரிகமாக கருதுகிறார்கள். சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தால் அநாகரிகமாக கருதப்படுகிறது. ஏனெனில் அது அந்நாட்டினருக்கு மரணச் சின்னமாகும். ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையை தூக்கி அசைப்பது அநாகரிகமாக கருதப்படுகிறது.

நம் நாட்டிலும் அநாகரிகமாக கருதப்படும் சில விஷியங்கள் உள்ளது. அவை அனைத்துமே சாதி,
மத ரீதியில் மட்டும் உள்ளது தான் நம் நாட்டின் சாபக்கேடு.

Related Articles

ஜியோ போன் வாங்கியவர்கள் என்ன பாவம் செய்த... "குறைந்த விலையில் நிறைந்த சேவை" இந்த வாக்கியம் மக்களை முட்டாளாக்கும் வாக்கியம். மக்களை முட்டாளாக்கும்படியே நடந்துகொள்கிறது ஜியோ கம்பெனி. ஜியோ கீபேட்...
பாக்யராஜின் நேர்மையை பாராட்டும் ரசிகர்கள... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம் என்ற அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இந்தப் படம் பற்றி பலவாறு பேச்சு அடிபட்டது. ...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
இயக்குனர் பாலாவிடம் ஓர் வேண்டுகோள்!... இயக்குனர் பாலாவை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. நாம் அனைவரும் பாலாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்போம். இருந்தாலும் இன்னும் கூடுத...

Be the first to comment on "” என்ன வேலை செய்றீங்க? ” என்ற கேள்வி எழுப்புவது இத்தாலி நாட்டில் அநாகரிகச் செயல் – சில வித்தியாச சம்பிரதாயங்கள் மற்றும் சில கோயில் அதிசயங்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*