அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம்

ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று (புதன்கிழமை) வெளியிட்டு இருக்கிறது.

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களுக்கான பணவீக்கத்தின்  அளவீடாக 4.8 முதல் 4.9 சதவீதமாக நிதிக் கொள்கைக் குழுவால் திருத்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வீட்டுக்கடனுக்கான மாத தவணை மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் உயரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்கு வருடங்களுக்குப் பிறகு ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சாதகமற்ற சர்வதேச சூழல்

கச்சா எண்ணெய் விலை  இரண்டு மாதங்களில் 12 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 66 டாலர்களாக இருந்த ஒரு பீப்பாயின் விலை தற்போது 74 டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது போன்ற காரணங்களால் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக நிதிக் கொள்கைக் குழு தெரிவித்து இருக்கிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதன் காரணமாக நடுத்தர கால கடன்களுக்கான வட்டியையும் வங்கிகள் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் விகிதம்  எந்த மாற்றமும் இல்லாமல் 7 . 4 சதவீதமாகவே நீடிக்கிறது. அதன் வளர்ச்சி முதல் பாதியில் 7 .5 முதல் 7 . 6 சதவீதமாகவும், இரண்டாம் பாதியில் 7 . 3 முதல் 7 . 4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

Related Articles

அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யா... மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்ச...
தடம் பார்ட் 2 எப்போது வரும்? – ... இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அருண்விஜய் இருவரும் இரண்டாம் முறையாக கைகோர்த்து உருவாக்கி இருக்கும் படம் தடம். இந்தக் கூட்டணிக்கு ஏற்கனவே நல்ல ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...
”முதலமைச்சர் பழனிசாமிக்குள் புகுந்... கடமை வேறு, பெருமை வேறு, தியாகம் வேறு என்று நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம் என்று தெரியவில்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் இதை எப்போது புரிந்து கொள...

Be the first to comment on "அதிகரிக்க இருக்கிறது வீட்டுக்கடனுக்கான இஎம்ஐ. சரக்குகள் மற்றும் சேவைகளின் கட்டணமும் உயரும் அபாயம்"

Leave a comment

Your email address will not be published.


*