24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!

24 hours free educational counselling centres

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம்
துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நோக்கம் :

நாளுக்கு நாள் மாணவ தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர்
பத்தாம் வகுப்பு பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள். தேர்வில் தோல்வி
அடைந்துவிட்டால் உடனே தற்கொலை முடிவுக்கு சென்றுவிடுகிறார்கள். அதற்கு காரணம்
அதற்கடுத்து என்ன செய்வது என்ற முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததே ஆகும். இதனை
தடுக்கும் பொருட்டு தான் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி சார்ந்த ஆலோசனைகள், உயர்கல்வி குறித்த விழிப்புணர்வுகள்,
மாணவர்களின் மன உளைச்சலுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில்
பள்ளிக்கல்வித்துறையால் ஆலோசனை மையம் துவங்கப்பட்டுள்ளது. இது சென்னை
பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் அழைத்து பயன்பெற்றிருக்கிறார்கள். அவர்களில்
பெரும்பாலானோர் பெற்றோர்களே. தொடங்கிய முதலிரண்டு நாட்களில் ஆராயிரத்துக்கும்
மேற்பட்டோர் அழைப்பு விடுத்து பயன்பெற்றிருக்கிறார்கள். இப்போது நாளைக்கு 2000க்கு
மேற்பட்டோர் அழைப்பு விடுத்து பயன்பெறுகின்றனர். மேலும் இது மனநல ஆலோசனைகள்
வழங்க மனநல ஆலோசகர்களையும் கொண்டுள்ளது.

சேட்டைகள் கூடாது

இது சிம் கம்பெனி கஸ்டமர் கேர் இல்லை என்பதை மனதில் தெளிவாக நிறுத்திக்கொள்ளவும்.
இவர்களிடம் போன் செய்து நாளைய தேர்வு வினாத்தாள் கிடைக்குமா, எங்க டீச்சர மாத்த
முடியுமா போன்ற சேட்டைகள் அறவே கூடாது.

இலவச அழைப்பு எண்

ஆலோசனைகள் இலவசமாக பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். மாணவர்கள்
அல்லாத பருவத்தினர் தற்கொலை எண்ணம் தழைத்தோங்கும் போது 104 என்ற இலவச
எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

ஆட்டோ எக்ஸ்போ 2018ல் அறிமுகம் செய்யப்பட்... இந்தியாவே உற்று நோக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2018ல் பல புதிய வகை கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன திருவிழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பங்கேற்பாள...
அசுரன் படத்திற்கு 55 மதிப்பெண்கள் போட்ட ... 2019ல் வெளியான படங்களில்  ஆனந்த விகடன் மதிப்பெண் 40க்கும் மேல் பெற்ற படங்கள் :  பேட்ட - 41 விஸ்வாசம் - 40 பேரன்பு - 56 சர்வம் தாள ம...
செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும்... சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்...
தமிழ் சினிமாவும் பறவைகளும்! – தமிழ... தமிழ் சினிமாவில் இதுவரை, "பறவைகளை" இரண்டு காதலர்கள் கைகோர்த்துக்கொண்டு  ஓடித்திரியும் காட்சிக்கு உவமையாக காட்டியிருக்கிறார்கள்.   நாயகிகள் கிளி, புறா,...

Be the first to comment on "24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! – மாணவர்களிடையே நல்ல வரவேற்பு!"

Leave a comment

Your email address will not be published.


*