கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!

Some information about “Crazy” Mohan
  1. 40 ஆண்டுகளில் 6500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் மேடையேற்றம் செய்துள்ளார். 
  2. மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, அண்ணாமலை, வாசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற 20 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வசனம் எழுதி உள்ளார். 
  3. மைக்கேல் மதன காமராஜனில் மளிகை கடைக்காரராகவும் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் மார்க்க பந்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவற்றில் எல்லாம் கமல் தான் வற்புறுத்தி நடிக்க வைத்தார். 
  4. கிரேஸி கிரியேசன்ஸ் 1979ல் ஆரம்பித்தார்கள். இது வரைக்கும் 6500 ஷோ போட்டிருக்கிறார்கள். 
  5. எல்லா நாடகமும் 300, 400 ஷோ போட்டிருப்பார்கள். குறிப்பாக  ” மீசையானாலும் மனைவி “, ” மேரேஜ் மேட் இன் சலூன் ” நாடகங்களை 700 முறைக்கு மேல் போட்டு உள்ளார்கள். சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தை 1009 ஷோ போட்டிருக்கிறார்கள். 
  6. கிரேஷி மோகன் ரொம்ப ரசிச்சு எழுதின நாடகம் சாக்லேட் கிருஷ்ணா தான். கிரேஸி மோகனுக்கு பிடிச்ச டிராமாவும் சாக்லேட் கிருஷ்ணா தான். 
  7. இவரது நாடகங்களை தூர்தர்ஷன் சேனல் செவ்வாய் கிழமைகளில் ஒளிபரப்பியது. 
  8. இவரது குழுவை நம்பி 25 குடும்பங்கள் உள்ளன. 
  9. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் எட்டு தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ௧ணேஷ் இருவரும் இவரது நாடக குழுவில் இருந்தவர்கள். 
  10. 66 வயதில் மரணமடைந்தார். 

கிரேஸி மோகனின் வசனங்கள் சில: 

  1. இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க?மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?

    இப்ப மருந்து கொட்டிடுச்சி.

  2. என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா…!!

     அய்யோ…!! அப்பறம்?

    “சாத்திட்டா”

  3. கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக்

    காப்பாத்தினியே, அவ இப்போ எப்படி இருக்கா?

    முழுகாம இருக்கா..!!!???….

  4. DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி

    இருக்கு?

    போயும் போயும்v இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு

    தோணுது டாக்டர்…!

  5. “எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?”

    அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!”

  6. வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

    அதனால…?

    வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

  7. “தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?”

    “நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்”

  8. ஹீரோவுக்கும் தயாரிப்பாளருகும் என்ன வித்தியாசம்?

    ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில்

    கோடீஸ்வரனாகி விடுவான்,

    கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல

    ஏழையாயிடுவாரு…!

  9. “தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?”

    “சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?”

  10. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

    அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!!!

Related Articles

இவர்களில் “பொன்னியின் செல்வன̶்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில...
தமிழ் நாட்டின் முதல் பெண் டைரக்டர் டி. ப... ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் 1911 ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்தார். சொந்த ஊர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு. தந்தை பஞ்சாபகேச அய்யர், கிராம கணக்க...
பறையர்கள் தானே செத்தால் சாகட்டும்! ̵... இந்தியாவின் உயர்சாதியினரை விட மிகமிக மேலான மனசாட்சியும் பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர். இது தான் இந்த நாவலின் மையக்கரு.எழுத்தாளர் ஜெயமோகனின...
விஜய் ரஜினிக்கு நோ சொல்லி கமலுக்கு ஆதரவு... கமல், ரஜினி வருகையைத் தொடர்ந்து அடுத்தது தளபதி விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் விஜயின்...

Be the first to comment on "கிரேஸி மோகன் பற்றிய சில தகவல்கள்!"

Leave a comment

Your email address will not be published.


*