காவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்

Cauvery turmoil forces BCCI to shift IPL games from Chennai to Pune

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு
அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த அனைத்துப் போட்டிகளையும் புனே நகருக்கு மாற்ற இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்

சென்னையில் தொடர்ந்து போட்டிகள் நடத்தினால் போதிய பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மாநில அரசு தெரிவித்து இருப்பதால் சென்னையில் நடக்க இருந்த அனைத்துப் போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்பட்டிருப்பதாக ஐபிஎல் தலைவர் ராஜேஷ் ஷுக்லா தெரிவித்தார். நான்கு வெல்வேறு நகரங்கள் பட்டியலிடப்பட்டு, இறுதியில் புனே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இரண்டாண்டுகள் புனேவில் விளையாடிய அனுபவம் பெற்ற தோனி இந்த முடிவை எடுத்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை உள்துறை செயலாளரிடம் பேசிய ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

நான்கு தேர்வுகள்

புனே தவிர்த்து விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களும் பரிசீலனையில் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டு காரணங்களுக்காக புனே இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. புனே விளையாட்டரங்கத்தை பற்றிய போதுமான அனுபவம் தோனிக்கு உண்டு. வீரர்கள் எளிதில் சென்றடைய வசதியாக வான்வழி போக்குவரத்து வசதியும் புனேவுக்கே சாதகமாக அமைந்திருக்கிறது.

தயார் நிலையில் புனே

அனைத்துப் போட்டிகளையும் நடத்தும் வகையில் புனே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. முன்னதாக சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விளையாட வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

” கென்னடி கிளப் ” திரைப்படம்... வெண்ணிலா கபடி குழு படத்தை அடுத்து கபடியை கதைக்களமாக வைத்து சுசீந்திரன் இயக்கும் இரண்டாவது படம் கென்னடி கிளப். இந்தப் படத்தின் மூலமாக சுசூந்திரன...
வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் ... மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானி...
பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள எ... கர்நாடகா மாநிலத்தின் இயற்கை பேரழிவு கண்காணிப்பு மையம் (கே.எஸ்.என்.டி .எம்.சி), பெங்களுருவில் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை இன்று (திங்க...
ஓட்டு போடாதவர்களும் நோட்டாவுக்கு ஓட்டு ப... கவுண்டமணி தான் ஹீரோவாக நடித்த 490 படத்தில், நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்கள், ஓட்டே போடாமல் இருப்பவர்கள், இந்திய தேசம் சாமானிய மக்கள் வாழ்வதற்கான தேசம் ...

Be the first to comment on "காவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ – சென்னை போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றம்"

Leave a comment

Your email address will not be published.


*