கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா

google

கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்குள் நுழைந்த கூகுள், இன்று சர்வ வல்லமை பெற்று தொழில்நுட்பம் சார்ந்த அனைத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சூழ்நிலையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவிலும் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு வடிவமாகச் சிறந்த தருணங்களை யார் உதவியும் இல்லாமல் நிழற்படம் எடுக்கும் கருவியை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது.

தானியங்கி செயற்கை நுண்ணறிவு கேமரா

கடந்த அக்டோபர் மாதம் செயற்கை நுண்ணறிவு கேமராவை கூகுள் அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அந்த கேமராவை விற்பனைக்கு வைத்துள்ளது கூகுள் நிறுவனம். கூகுளால் வெளியிடப்படும் இந்தச் செயற்கை நுண்ணறிவு கேமராவின் விலையாக 249 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிறந்த தருணங்களைத் தானாகவே நிழற்படம் எடுத்துக் கொள்ளும் என்பதே இந்தக் கருவியின் சிறப்பம்சம். இந்தத் தானியங்கி செயற்கை நுண்ணறிவு கேமராவுக்கு கிளிப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

என்ன இருக்கிறது க்ளிப்ஸ் கேமராவில்?

சூழ்நிலைக்கு ஏற்ப, தனது 130 டிகிரி லென்ஸை தானாகவே சரிசெய்து கொள்ளும். குழந்தைகளை அதிகமாக நிழற்படம் எடுக்க விரும்பும் பெற்றோர்களுக்கு இந்தக் கருவி ஒரு வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேமரா கிடைக்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்

இந்த கேமராவுக்கான ஆர்டர்கள் பெறுவதைக் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கேமராவை பெற விரும்புபவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு, பிறகு மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படுவார்கள். ஆகவே இந்த கேமராவை உடனடியாக பெற விரும்புபவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

அப்போ இனிமே வித விதமா போஸ் கொடுக்க முடியாதா?

Related Articles

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் பற்றிய சில ச... காமராஜ் - ஈஸ்வரி என்ற தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார். தாய் தந்தை இருவரும் யூனியன் டிஸ்பென்ஸரியில் நர்சிங் அசிஸ்டென்டாக வேலை பார்த்தவர்கள்....
அரசியல்வாதியின் மகன்களும் தமிழ்சினிமாவும... ஒரு சில மனிதர்களை தமிழ் சினிமா தொடர்ந்து மோசமானவர்களாகவே சித்தரித்து வருகிறது. அந்த சித்தரிப்பில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்பது மறுக்க முடியாது. முத...
நாலு பேருக்கு ஒரு தட்டு சாப்பாடு எப்படி ... தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் பாலாஜி சக்திவேல். சாமுராய், காதல், கல்லூரி, வழக்கு எண்18/9 என்று அவர் இயக்கிய படங்கள் அத்தனையும் முத்தான படை...
குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் ப... தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. ஃபுல்லி என்ற யூடிப் சேனலில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் கி...

Be the first to comment on "கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை நுண்ணறிவு கேமரா"

Leave a comment

Your email address will not be published.


*