இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமுத்துவும் எஸ்பி.பியும் வாழ்த்து தெரிவிக்க, கடுமையாக விமர்சிக்கிறார் பாரதிராஜா ! அரசியல் லாபத்திற்காக இளையராஜாவுக்கு இந்த விருது?

pandma bhushan

கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க
இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து
தெரிவித்து வந்தாலும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

வாழ்த்துக்களும் விமர்சனங்களும்

இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது என்றதும் கமல் முதல் ஆளாக முந்திக்கொண்டு, தாமதாக கிடைத்தாலும் வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் பதிவிட்டார். ரஜினியும் போன் மூலமாக
வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார். இன்னும் பலர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், இந்த விருதை நியாயப்படி நீங்கள் நிராகரிக்க வேண்டும். எப்பவோ வந்து சேர்ந்திருக்க வேண்டிய விருது இப்போது உங்களை தேடி வருவதற்கு காரணம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே. உங்களுக்கு விருது கொடுப்பதன் மூலம் தமிழர்களின் மனதை கவர்ந்துவிடலாம் என்ற கணக்குப் போட்டுத்தான் உங்களுக்கு இந்த விருதை அறிவித்திருக்கிறார்கள் என்று சிலர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் பொங்கி எழுந்தனர். இது போன்ற கருத்துக்கள் நிச்சயம் எழும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால் யாரும் வைரமுத்து, எஸ்.பி.பியின் வாழ்த்துக்களையும் பாரதிராஜாவின் விமர்சனத்தையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இயக்கிய “சிறைப்பறவை” படத்தில்

‘பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்’ பாடல் தான் இளையராஜா, வைரமுத்து இருவரும்
கடைசியாக சேர்ந்து பணியாற்றிய பாடல். இருவரும் இணைந்து பணியாற்றி 31 ஆண்டுகள்
ஆகிறது. தற்போது இளையராஜா பத்மவிபூசண் விருது பெற்றதை அடுத்து, வைரமுத்து கவிதை
மூலமாக வாழ்த்தியிருப்பது இணைவரும் கூடியவிரைவில் இணைய இருக்கிறார்கள் என்பதை
உணர்த்துகிறது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும்

“மாமனிதன்” படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக்
கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு காப்பிரைட் பிரச்சினை காரணமாக பாடகர் எஸ்.பி. பிக்கும்
இளையராஜாவுக்கும் இடையே லேசான பிளவு ஏற்பட்டது. இருப்பினும் தற்போது

இளையராஜாவுக்கு விருது கிடைத்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
எஸ்.பி.பி.

இப்படி ஜாம்பவான்களின் வாழ்த்துக்கள் ஒருபுறமிருக்க, ஆங்கில பத்திரிக்கை ஒன்று
இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்டு எழுதியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த செய்தி
வருத்தத்தை உண்டாக்குவதாக இயக்குநர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
நடிகை கஸ்தூரியோ அந்த நாளிதழ் மேல் காரித்துப்பி கிழித்து எரிந்துவிட்டார். அந்த வீடியோ
சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இவர்கள் எல்லோரும் இளையராஜா விருது விஷியத்தில்
கீழ்த்தனமாக நடந்துகொண்ட செய்தித்தாளை விமர்சிக்க, இயக்குநர் பாரதிராஜாவோ
இளையராஜாவை

“இளையராஜா ஐயராக மாற நினைக்கிறார். மூலத்தை மறந்துவிட்டு புதிய வேடமிடுவது தவறு”
என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய பாரதிராஜா, இளையராஜாவுக்கு
உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றதும் காழ்ப்புணர்ச்சியில் கொந்தளிக்கிறார் என்றும்,
இளையராஜாவுக்கு விருது கொடுத்ததே வைரமுத்துவுக்கு எதிராக எழுந்த பிரச்சினையை
ஈடுகட்டுவதற்குத்தான் என்றும், இளையராஜாவுக்கு விருது கொடுத்து, கங்கை அமரனைப் போல
இளையராஜாவையும் தன் பக்கம் இழுத்துவிடலாம் என்று பா.ஜ.க அரசு நினைத்துள்ளது என்றும்
பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில்
இளையராஜாவுக்கு இந்த விருது மிகமிக தாமதம் என்பது மட்டும் உண்மை.

Related Articles

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி, கட்டுரை ... இந்த மாதிரி இணையதளங்களை நம்பி சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள் இளைஞிகள் எல்லாம் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அவர்களெல்லாம் இந்த பக்கம் எட்டி...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...
ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கட... வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்க...

Be the first to comment on "இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமுத்துவும் எஸ்பி.பியும் வாழ்த்து தெரிவிக்க, கடுமையாக விமர்சிக்கிறார் பாரதிராஜா ! அரசியல் லாபத்திற்காக இளையராஜாவுக்கு இந்த விருது?"

Leave a comment

Your email address will not be published.


*