மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம்

Social-Minded

ஸ்பைடர் படத்தின் தாக்கத்திலிருந்து…

அறிமுகமில்லாத மனிதனுக்கு எதிர்பார்ப்பில்லாமல் உதவி செய்வது தான் மனிதாபிமானம் என்ற கருத்தை சமீபத்தில் வெளியாகிய ஸ்பைடர் திரைப்படத்தின் கடைசி வரி இது. மக்கள்தொகை பெருகி, அன்றாட பிழைப்புக்காக பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் மக்களிடையே
மனிதாபிமானம் குறைந்துகொண்டே வருகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. புயல், வெள்ளம், சுனாமி போன்ற பெரிய பேரிடர்கள் வரும்போது மட்டுமே நம்முடையே மனிதாபிமானம் வெளியே வருகிறது. மீதி நாட்களில் இன்னொரு மனிதனின் முகத்தை பார்ப்பதற்குகூட நேரமில்லாத நாம் பார்ப்பதெல்லாம் செல்போன் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் ஸ்கிரீன், டிவி ஸ்கிரீன் மட்டுமே.

அதனால் தான், விவசாயத்துக்காக சாலையில் இறங்கி சிலர் போராடிய போதிலும், அனிதாவின் தற்கொலைக்கு நீதி வேண்டி சிலர் போராடிய போதிலும் நம்முடைய மனிதாபிமானத்தை வெறும் லைக், ஷேரில் மட்டுமே காட்டினோம்.  இதற்கு பெயர் தான் எஸ்பிடி. அதாவது சாடிஸ்டிக் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர். சகமனிதன் துன்பத்தில் மூழ்கி கஷ்டபட்டு கொண்டிருப்பதை, எவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன என்று சுயநலமாக ஒதுங்கி, அவனுடைய கஷ்டத்தை கண்டுங்காணாமல் போவதும், அவன் நிலைமையை ஏளனமாக பார்த்து சிரிப்பதும் தான் எஸ்பிடி. இது சாதாரண மனிதனுக்கு நான்கு சதவீதம் இருப்பதாகவும், கலிபோர்னியாவில் நடந்த ஆய்வொன்றில் இன்றைய சூழலுக்கு இந்த எஸ்பிடி நான்கிலிருந்து ஆறு சதவீதமாக உயர்ந்துவிட்டதாகவும்  படத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஒருபுறம் மாணவர்கள் எங்களுக்கு சிறந்த , சமமான கல்வியை போதியுங்கள் என்று சாலையில் இறங்கி போராடிய பொழுது, ஆசிரிய சமுதாயம் அவர்களுக்கு துணைநிற்காமல் சம்பளத்துக்காக மன்றாடிக்கொண்டிருந்தது என்றால் பாருங்கள் மனிதாபிமானம் எந்தளவுக்கு இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்று.

பக்கத்தில் உள்ளவனை நேசி என்றார் டால்ஸ்டாய். ஆனால் நாம் அப்படியா வாழ்ந்து வருகிறோம்? அக்கம்பக்கத்தினருக்கு எதாவது துன்பம் நேர்ந்தால், உள்ளுக்குள் மகிழ்ந்து, வெளியே போலியான அக்கறையாக அடப்பாவத்த இப்படி ஆகிடுச்சே என்று வருந்துவதுபோல பாவனை செய்கிறோம். மக்கள்தொகை வதவதவென்று பெருகிவிட்டது. நாம் வாழ்வதற்காக ஆறு, மலை, காடு என மற்ற உயிரினங்களை பற்றிய கவலையின்றி அனைத்தையும் நாசம் செய்து வருகிறோம். அதனால் தான் ஓசுர், கிருஷ்ணகிரி, கோவைகளில் அடிக்கடி யானைகள், பேருந்தில்  அடிபட்டு, ரயிலில் அடிபட்டு, மின்வேலியில் சிக்கி உயிரிழந்துகொண்டிருக்கிறது. அந்த செய்திகளையெல்லாம் மனிதாபிமானத்துடன் நாம் கடந்து வருகிறோமா?

தொழுநோயாளிகளிடம் அன்னை தெரசா காட்டிய மனிதாபிமானம், பசிப்பிணியில் வாடியவருக்கு வடலூர் வள்ளலார் காட்டிய மனிதாபிமானமெல்லாம் நமக்கு எப்போதுதான் வருமோ?

அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்குக் கென்புதோல் போர்த்த உடம்பு என்றார் வள்ளுவர். ஆக, இனியாவது சகமனிதனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு காட்டுவோம்! அந்த அன்பு பரிசுத்தமானது!

 

Related Articles

சுஜித்தின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்... நடிகர் விவேக் : கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எ...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி ... இந்திய வங்கிகளில் கோடி கணக்கில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்கு எஸ்கேப் ஆகி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய் மல்லையா. இப்போது அந்த வரிசை நீர...
தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொ... கடந்த இரண்டு நாட்களாகவே ஊடகங்களில் ரஜினி பற்றிய செய்திதான் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தூ...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1. The Children of heaven (1997) படத்தை இயக்கியவர் - Majid majidi  இவரது பிற படங்கள்: Kashmir Afloat (2008)(announced) Weeping willow (2005)...

Be the first to comment on "மனிதாபமானமா? அப்படினா என்ன பாஸ்? – சமூகம்"

Leave a comment

Your email address will not be published.


*