செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் – சீறிப்பாய்ந்த சிவக்குமார்!

செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் - சீறிப்பாய்ந்த சிவக்குமார்!

சிங்கத்தையும் சிறுத்தையையும் பெற்று வளர்த்தவரான சிவக்குமார் நடிகர், ஓவியர், பேச்சாளர்
என்று பன்முகத் தன்மை வாய்ந்தவர். சில வருடங்கள் வரை இவருடைய சொல்லுக்கு ஏராளமான
மக்களிடம் மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால் அந்த ஐடி பெண்களின் விவகாரத்தில் தன்னுடைய
ஒட்டுமொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

சிவக்குமார் மாதிரி பிள்ளைங்கள நல்ல படியா வளத்தி ஆளாக்கணும் என்று சொல்லும் அளவுக்கு
உண்மையிலயே அவருடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்
என்பது யாவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சிவக்குமார் சமீப காலமாக சில சங்கடங்களை
சந்தித்து வருகிறார்.

நெட்டிசன்களின் கலாய் :

இந்த மனுசன் என்னடா செல்போன்ல வாலிபால் விளையாண்டு பழகுறாப்ள, 2.O ல அக்ஷய்
குமாருக்குப் பதிலா சிவக்குமார போட்ருக்கலாம், மனுசன் குழந்தையா மாறிட்டாருடா அதான்
செல்போனை கீழ தட்டிவிட்டுட்டாரு, இதே ஒரு பொண்ணு செல்பி எடுக்க போயிருந்தா இவரு
கோபப்பட்டுருப்பாரா? பல் இளிச்சிட்டு நிப்பாரா? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடேக்கரா
என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

மிரள வைக்கும் பேச்சாளர்:

காந்தி, சிவாஜி, இராமாயணம், மகாபாரதம், இந்திய விடுதலைப் போராட்டம் என்று எந்த
தலைப்பில் பேசப் போவதாக இருந்தாலும் முழு அர்ப்பணிப்போடு அவருடைய பேச்சைக் கேட்க
கூடியிருக்கும் மக்களின் நேரத்திற்கு மதிப்பு அளித்து பேசக்கூடியவர். அவருடைய பேச்சுக்காக
ஈரோடு புத்தகத் திருவிழாவில் கூடும் மக்களின் எண்ணிக்கையே அதற்குச் சான்று.

பேசப்போகும் விஷியத்தை முடிந்தவரை அலசி ஆராய்ந்து பேசக்கூடிய மனிதர் ஐடி பெண்களின்
விஷியத்தில் எப்படி சறுக்கினார் என்று பலரும் வியப்படைந்தனர். அப்போது முதலே 2 டன்
சிவக்குமார் என்று பலரால் கேலிக்கு உள்ளானார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் நகைகடை திறப்புவிழா ஒன்றிற்குச் சென்றிருந்த சிவக்குமார்
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞனின் செல்போனை எரிச்சலுடன் கீழே தட்டிவிட்டார்.
ஒரு நல்ல காரியம் தொடங்கும்போது ஏன் கோபப்பட்டார் என்று தெரியவில்லை.

எத்தனையோ இக்கட்டான சூழலில் கூட பல நடிகர் நடிகைகள் தங்களுடன் செல்பி எடுக்க
முயலும் ரசிகர்களுடன் ஒன்றிரண்டு செல்பி எடுத்துக்கொண்டு டாட்டா கிளம்பி செல்வார்கள்.
அந்த விதத்தில் இந்த தலைமுறை நடிகர் நடிகைகளை வெகுவாகப் பாராட்டலாம்.

தம்பி போட்டா எடுக்காத, குறுக்கால நின்னு இடைஞ்சலா இருக்காத என்று சொல்லி இருக்கலாம்
அல்லது கண்டுங்காணாதது போல் சென்றிருக்கலாம்.

தியானம், யோகா, அறிவுரை என்று மக்களிடையே நன்மதிப்பை பெற்ற சிவக்குமார் ஒரு நிமிட
கோபத்தால் தன் மதிப்பை கெடுத்துக் கொண்டார்.

Related Articles

அரசாங்கம் உணவு தராதபோது, பிச்சையெடுத்தல்... அரசாங்கம் வேலையோ, உணவோ தராத போது, பிச்சையெடுத்தல் எப்படி குற்றமாகுமென்று டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிச்சையெடுத்தலைக் குற்றவிலக்கு ச...
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது ... காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கி...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து... தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தி... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடிக்கல...

Be the first to comment on "செல்பி எடுக்க முயன்றால் செல்போன் உடையும் – சீறிப்பாய்ந்த சிவக்குமார்!"

Leave a comment

Your email address will not be published.


*