பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!

A View of the George Bernard Shaw Quotes
  1. தேவையான சந்தர்ப்பங்களை தேடிப் பெறுபவர்கள் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பர்.
  2. சந்தர்ப்பம் தானாக வரக்கூடியது அல்ல. மனிதன் தான் அதனை தானாக உண்டுபண்ணிக் கொள்ள வேண்டும்.
  3. அறிவற்ற சினேகிதனிடம் சேர்வதைவிடப் புத்திசாலியான விரோதியை அடைவது மேல்.
  4. அமைதியான வாழ்வே ஆனந்த வாழ்வு. அமைதியான உள்ளமே மகிழ்ச்சிக் கடலின் எல்லை.
  5. இன்பமும் துன்பமும் பணத்தை பொறுத்தவை அல்ல. மனதை சார்ந்தவை. பணமானது பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது.
  6. அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார். அது சோதனையை தந்த பிறகுதான் பாடத்தைப் போதிக்கிறது.
  7. சந்தர்ப்பம் வரும் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர் தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறவர்கள்.
  8. நல்ல ஒழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பாகும்.
  9. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மணம் செய்து கொள்வது ஒரு பெண்ணின் கடமையாகும். அதை எவ்வளவு காலம் தள்ளி வைக்க இயலுமோ அவ்வளவு காலம் தள்ளி வைப்பது ஓர் ஆணின் கடமையாகும்.
  10. அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
  11. நூல் நிலையம் என்பது மனித வாழ்வில் ஒரு ஆடம்பரமன்று. அவசியமேயாகும். உழைப்பால் களைப்பு அடைகிறவர்களே இன்பம் அடைகிறார்கள்.
  12. அரசியல்வாதிகள் இயற்றும் சட்டங்கள் அடிக்கடிமாறும். மாற்றப்படும். அறிவாளிகள் இயற்றும் நூற்கள் அமரத்துவம் வாய்ந்தவை, அழிவற்றவை.
  13. சிந்தனை என்பது நாம் விரும்பி மேற்கொள்ளும் கற்பனையே.
  14. விருப்பமில்லாது திணிக்கப்படும் கல்வி வேண்டாத உணவு.
  15. உயிர் உள்ள வரையில் உழைத்து சாக விரும்புகிறேன். உழைக்க உழைக்கத் தான் எனக்கு உயிர் வாழ விருப்பம் இருக்கிறது.
  16. தன் சொந்த மொழியில் முழுத்திறன் பெறாத எவனும் மற்ற மொழியில் திறன் பெற முடியாது.
  17. மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால் அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது.
  18. நாம் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
  19. உண்மையான அறிவின் வேலை நகைச்சுவையுடன் இணைந்ததே.
  20. வாழ்க்கையில் வெறுப்பை வெளிப்படுத்த சிறந்த வழி அமைதியாயிருப்பதே.
  21. அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் வரைமுறை இல்லை. இரண்டும் எல்லையற்றவை.

Related Articles

பாட புத்தகங்கள் பொதுவா நல்ல புத்தகங்களா ... சமீபத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் எது மிக தாழ்ந்த சாதி என்ற வினாவை கேட்டிருந்தது சமூக வலை தளங்...
தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! R... சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் மு...
டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் பொன்மொழிக... காலத்தின் மணற்பரப்பில் உன் காலடிச் சுவடுகளை பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம் நேர...
புதிதாக வாட்சப் குரூப் தொடங்க வேண்டுமென்... வாட்சப் போன்ற சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகின்றனர். குறிப்பாக பல ஊர்களில் பொய்யாக பரப்பப்பட்ட வாட்சப் வதந்திகளால் பலருடைய உ...

Be the first to comment on "பெர்னாட்ஷா பொன்மொழிகள் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*