இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!

India's Google boy

இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா
பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும் இவரது
அற்புத நினைவாற்றலை இன்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஹரியானா மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் கோஹண்ட் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் சர்மாவிற்கும் சுமிதா சர்மாவிற்கும் டிசம்பர் 2007 ல் பிறந்தவர். கர்நூல் மாநிலத்தில் உள்ள கோஹண்ட் கிராமத்தில் இருக்கும் எஸ்.டி ஹரித் மாடர்ன் பள்ளியில் பயின்று வந்தார். இப்போது
பஞ்சகுலாவில் உள்ள சிறிய பள்ளிக்கூடம் ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

சரியாக அவருக்கு நான்கு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் ஆக்ராவிற்குச் சென்றபோது
வழிநெடுகிலும் இருந்த அறிவிப்பு பலகைகள், பெயர் பலகைகளை தவறில்லாமல் படித்துக்
காமித்தான். அப்போது முதல் அவருடைய பெற்றோர் சொல்லித்தந்த நாடுகள் பற்றிய தகவல்கள்,
வரலாற்றுக் குறிப்புகள் போன்றவற்றை ஒன்றுவிடாமல் அனைத்தையும் அப்படியே நியாபகம்
வைத்திருக்கிறார்.

இவரது திறமையை பாராட்டி ஹரியானா முதல்வர் இவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அந்த சான்றிதழிலில் இருந்த எழுத்துப் பிழையையும் சுட்டிக்காட்டி அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதே போல அமிதா பச்சன் நடத்தி வந்த நிகழ்ச்சியொன்றில்
குழந்தைகள் தினத்தன்று கலந்துகொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு ஸ்மார்ட்டாக பதிலளித்து
வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அவருக்கு விஞ்ஞானியாக வேண்டுமென்பது விருப்பமாம். அப்துல் கலாமை ஒரு முறை நேரில்
சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார். இந்தியாவில் அப்துல்கலாம்
போன்ற பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டுமென்பது பலருடைய விருப்பம். கௌடில்யா
பண்டிட் விஞ்ஞானிக உருவெடுக்க வாழ்த்துவோம். நம்மை சுற்றி இருக்கும் குட்டி குட்டி
விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்துவோம்.

Related Articles

குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகே... பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிர...
நியூட்ரினோ : புதிரா? அறிவியலா?... பேய் படங்கள் நிறையப் பார்த்தவர்களுக்கு இது எளிதில் புரியும். மர கதவோ அல்லது வீட்டுச் சுவர்களோ எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் தடையே இன்றி, மிக எளிதில் ...
யுவன் சங்கர் ராஜா ரசிகர்களுக்கு ஜூலை 15 ... யுவன் சங்கர் ராஜா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசை இயக்குனர். இருந்தாலும் அவருக்கு தேசிய விருது கிடைக்க...
டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான த... இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ...

Be the first to comment on "இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத நினைவாற்றல் கொண்ட பதினொரு வயது சிறுவன்!"

Leave a comment

Your email address will not be published.


*