நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்னை மெரினா கடற்கரை

Marina beach to get sea viewing seats CCTV cameras e-toilet and many more

விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த வசதிகள் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.

என்னென்ன வசதிகள்?

கடற்கரைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இணைய வசதி வழங்கும் வைபை சேவை, கடல் காட்சி அறை, முதல் உதவி செய்யும் வகையிலான பிரத்யேக இட வசதி, மின் கழிப்பறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது. மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த வசதிகள் செய்து தரப்பட இருக்கின்றன.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயல்படுத்த இருக்கின்றன. மேலும் இந்தத் திட்டத்திற்கான நிதி உதவிகளை மத்திய அரசு செய்யவிருக்கிறது. தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையே சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகும். இதற்காக 99.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும்.’ என்று சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

ஐந்து கடற்கரைகள்

மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம், ராமேஸ்வரம், மணிப்பாடு, கன்னியாகுமரி, மணிகுடி மற்றும் தெக்குறிச்சி ஆகிய கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மெரினாவை தொடர்ந்து மற்ற கடற்கரைகளில் இந்தத் திட்டம் செயல் வடிவம் கொள்ளவிருக்கிறது.

தனித்துவமான இடங்கள்

இந்தியாவின் மிக முக்கியமான 10 சுற்றுலா தளங்களில் மகாபலிபுரமும் ஒன்றாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சுற்றுலா தளங்களும் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என்று 2018 – 2019 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

Related Articles

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பிர... * பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன்; இவர்களை பொது வெளியில் நடமாடவிடுவது சமூகத்திற்கு பேராபத்து - நடிகர் ஜி.வி...
ஹரியானா மாநிலத்தில் ஒரு பியூன் பணிக்கு 1... தமிழ்நாட்டில் ஒரு அரசுப்பணிக்கு நூற்றுக்கணக்கான நபர்கள் போட்டி போட்டுகொண்டிருக்கிறார்கள். அதிலும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தகுதியுள்ள கால்நடை ...
ஜெயகாந்தனிடம் பத்து கேள்விகள்!... எழுத்து துறைக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? நான் வரவில்லை. எங்கோ போய்க்கொண்டிருந்த வழியில் எழுத்தாளனாய் வரவேற்கப்பட்டேன். நான் கதைகள் எழுதி பத்தி...
கவிப்பேரரசு வைரமுத்து பற்றிய சுவாரஸ்யமான... கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் 13-7-1953 ல் பிறந்தார். தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாள். வடுகப்பட்டியில் உயர்நிலைப் பள்ளிக்...

Be the first to comment on "நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்னை மெரினா கடற்கரை"

Leave a comment

Your email address will not be published.


*