பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்

Oil thieves

தென்மேற்கு டெல்லி, கக்ரோலா என்னும் இடத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதியில்,
கடந்த செவ்வாய் கிழமை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெடி சப்தம்
போன்ற ஏதோவொன்றை கேட்டு அந்தப் பகுதி மக்கள் தூக்கம் இழந்தனர்.

சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்

சோனிபட் மற்றும் பிஜவாஸன் ஆகிய இடங்களுக்கு நடுவே இந்திய எண்ணெய் கூட்டு நிறுவனம், குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களைக் கொண்டு செல்கிறது. அந்தக் குழாயை உடைத்து பெட்ரோல் திருட முயற்சி செய்தபோது, அது வெடித்து பெரும் சப்தத்தை உண்டு செய்திருக்கிறது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு பல்வான் சிங் என்பவருக்குச் சொந்தமான மனையில் குடியேறிய ஐந்து கொள்ளையர்கள், அவரது மனையிலிருந்து சுரங்கம் அமைத்து எண்ணெய் நிறுவனத்தின்
குழாயை உடைத்து பெட்ரோல் திருடி விற்கத் திட்டம் வகுத்தனர்.

எதிர்பாராத விதமாகத் திட்டத்தை செயல்படுத்தும் போது, பெருத்த சப்தம் ஏற்பட்டு
கொள்ளையர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. சம்பவ இடத்திற்குக் காவல் துறை வந்து
பார்த்த போது 150 அடி நீளமும், 2 . 5 அடி அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அவர்கள்
தங்கியிருந்த அறையில் இருந்து தோண்டப்பட்டு இருக்கிறது. அந்தச் சுரங்கத்தில் இருந்து
எண்ணெய்யை திருடி விற்பதே கொள்ளையர்களின் திட்டம்.

வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஸுபைர் என்ற ஒரு
கொள்ளையனை மட்டும் காவல் துறையினர் கைது செய்து இருக்கின்றனர். மேலும் நால்வருக்கு
அவர்கள் வலை வீசி இருக்கின்றனர்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு வாடகைக்குக் குடியேறிய உடனேயே, தோண்டும் பணியை
மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவும், கேஸ் கட்டர் வைத்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின்
குழாயில் துளையிடத் தயாராக இருந்ததாகவும், வீட்டில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தைச்
செங்கற்கள் கொண்டும், சோபாவை கொண்டும் மறைத்து வைத்திருந்ததாகக் கொள்ளையன்
ஸுபைர் போலீசிடம் தெரிவித்திருக்கிறான்.

‘இது ஐந்து பேர் கொண்ட கொள்ளையர் குழு செய்ததாக தெரியவில்லை. ஸுபைர் யாரிடம்
திருடிய பெட்ரோலை விற்கத் திட்டமிட்டிருந்தான் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று
வருவதாக’ மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

எதற்கும் உங்கள் மாடி வீட்டில் தினமும் சப்தம் கேட்டால் என்னவென்று ஒரு எட்டு பார்த்து
வாருங்கள்.

Related Articles

நடிகர்களின் மீது பித்து பிடித்தது போல் இ... பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு நடிகர் விஜய் சென்றிருந்தபோது அவருடைய தலை முடியை வைத்து இது டோப்பா முடி என்று அஜித் ரசிகர்கள...
#gobackmodi எதிர்ப்பையும் தாண்டி பிரதமர்... இன்று( ஏப்ரல்12) சென்னையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் பாரத பிரதமர் வருகை தந்துள்ளார். அவரு...
அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...
நடிகர்களை நம்பாதிங்க – சத்யராஜ்! ந... கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், " நடிகர்களை நம்பாதி...

Be the first to comment on "பெட்ரோல் திருடச் சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*