மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!

மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!

உலக அளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போராளிகள் பலர் கடிதம் எழுதி உள்ளனர். அதே போல காந்தி, நேரு, அண்ணா, அப்துல்கலாம் என்று பலர் கடிதம் எழுதி உள்ளனர். இவை அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. சமீபத்தில் பெரும்பாலானோரை கவர்ந்த கடிதமாக பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் கருதப் படுகிறது. இந்நிலையில் ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்கியின் கடிதம் ஒன்றை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. காரணம் இன்றைய இளைஞர் இளைஞிகள் அதிக அளவில் சமூக அவலங்களை சாடி மாற்றத்தை உருவாக்க துடிக்கிறார்கள் என்பதை அவர்களுடைய முகநூல் கட்டுரை, அரசியல் மீம்கள் வெளிப்படுத்துகின்றன. அந்த மாதிரி மாற்றத்தை விரும்பும் “இந்திய” இளைஞர் இளைஞிகள் மாக்ஸிம் கார்கியின் இந்தக் கடிதத்தை படித்துப் பார்த்தால் அவர்கள் இந்த சமூகத்தை மேலும் அதிகமாக நேசிக்கத் தொடங்குவார்கள் என்பது உறுதி.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னால் இர்குட்ஸ் என்ற பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இது.

” நீங்கள் எப்படிச் சிரமப்பட்டு உழைக்கிறீர்கள் என்பதைக் கேட்க பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மாணவர்களே அதுதான் விஞ்ஞானத்தை கற்க வேண்டும். மனிதனுக்கு அதைவிட பலம் பொருந்திய ஆயுதம் வேறொன்றுமில்லை. நம் உலக உழைப்பாளி மக்கள் கல்வி இல்லாமலும் அறியாமையாலும் சொல்ல முடியாத துயருக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உங்கள் தந்தையர்கள் விஞ்ஞானத்தின் சிகரம் வரை எட்டிப் போகும் அகன்ற பாதையை உங்களுக்குத் திறந்து வைத்துள்ளனர். நீங்கள் இப்பொழுது உங்கள் தந்தையர்கள் காட்டிச் சென்ற அவ்வழியில் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது.

நம் நாட்டிற்கு ஆயிரக்கணக்கில் டாக்டர்களும் பள்ளி ஆசிரியர்களும் விஞ்ஞானிகளும் பாடகர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் நடிகர்களும் இன்னும் எல்லா துறையிலும் சிறந்த இளைஞர்கள் தேவைப் படுகின்றனர். மக்கள் இயக்கம் ஒன்று தங்கள் சக்தியைச் செலவிட்டு பூமியின் கீழ் புதைந்துள்ள பொருள்களை எடுத்து அவற்றைப் பெருக்க வேண்டும்.

மக்களின் வாழ்க்கையைப் பாழாக்கும் நாட்டிலே ஊடுருவியுள்ள புல்லுருவிகளையும், நஞ்சு மனம் கொண்டவர்களையும் விசக் கும்பலையும் கூண்டோடு அழிக்க வேண்டும். நாட்டின் வளரச்சிக்குத் தீங்கு செய்யும் எவருக்கும் இங்கு இடம் இல்லை. நம் நாடு முழுவதையும் ஒரே தோட்டமாக கருதி உழுது பண்படுத்தி விளை நிலமாக்க வேண்டும். ஆறுகளுக்கு அணைகட்ட வேண்டும். “பயன்படாத” காட்டை அழித்து பல லட்சக் கணக்கான மைல் சாலை போட வேண்டும். பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை எலிகளை ஒழிக்க வேண்டும். மக்களுக்கு நோய்களை உண்டாக்கி விஷ ஜுரம் உண்டாக்கும் கொசுக்களை பல நோய்களை பரப்பும் ஈக்களைக் கொல்ல வேண்டும்.

இன்னும் நீங்கள் சாதிக்க வேண்டிய காரியங்கள் ஏராளம் உள்ளன. இந்த மண்ணில் ஓர் உண்மையான கலாச்சாரமுடைய சோஷலிஸ சமுதாயத்தை அமைக்க வேண்டும்.

இத்தகைய வேலைகள் உங்களை எதிர் நோக்கியுள்ளன. அதற்கு மிகப் பெரிய அளவில் விஞ்ஞான அறிவு வளர வேண்டி இருக்கிறது. அதன் மூலம் எல்லாவற்றையும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இத்தகைய பணிகளை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவனும் முனைந்து செயலில் ஈடுபட வேண்டும். நீங்களே உலகத்தின் சிறந்த மக்கள். எதிர்காலம் உங்களிடம் உள்ளது. உங்களை நாடு போற்றிப் புகழ் வேண்டுமானால் வீரப் புதல்வர்களாகச் செயல்படுங்கள். நாட்டிற்குத் தொண்டாற்ற உதவும் கல்வியைக் கற்று, பல்லாண்டுகளாக மனிதன் கண்டு வந்த ஆசைக் கனவுகளை நினைவாக்குங்கள்.

இளைஞர்களே! இந்த ஆசிரியனின் வேண்டுகோள் இதுவே. மனிதன் பயன் இன்றி அழியக் கூடாது. இதை உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ”

இதுவே அந்தக் கடிதம். இது மாக்ஸிம் கார்க்கி உயிரோடு இருக்கும்போது எழுதியது. பல ஆண்டுகள் ஆன போதும் இந்த வரிகள் மங்கலடிக்காமல் புத்துணர்வை ஊட்டக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

Related Articles

உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...
‘பிப்ரவரி 14ம் தேதிக்கு சமுத்திரக்... சர்டிபிகேட் : U/Aநேரம் : 135.58உயர்நீதிமன்றம் தடை செய்ததால் ஒரு நாள் தாமதமாக ரிலீஸ் ஆன படம் நாடோடிகள் 2. சமுத்திரக்கனி படம் என்றால் பிரச்சார ந...
எம்எல்ஏக்கள் என்ன விலை? வாக்களித்தவனுக்க... பக்கத்து மாநிலமான கர்நாடக அரசியலில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது. கடையை விரிக்கப் போவது நீயா இல்லை நானா என்று போட்டி போட்டு கூட்டல் க...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ... காட்ஃபாதர் - மூன்று தந்தைகளின் பாச போராட்டம்!  பின்னணி இசை அருமை. டைட்டில் கார்டு டிசைன் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாடல்கள் ஒருமுறை கேட்கும்...

Be the first to comment on "மாணவ மாணவிகளுக்கு மாக்ஸிம் கார்க்கி எழுதிய “புரட்சி” கடிதம்! – இந்திய இளைஞர்களுக்கு எப்போதும் பொருந்தும்!"

Leave a comment

Your email address will not be published.


*