வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதிராபாத்தில் சிறப்பு பிரார்த்தனை

வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதிராபாத்தில் சிறப்பு பிரார்த்தனை

ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்து முறைப்படி கட்டி முடிக்கப்பட்டன. தற்போது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் குறுக்கீடு காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் நீங்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை ஒன்று ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சில்கூர் பாலாஜி கோவிலில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு பிரார்த்தனைக்கு ‘சக்ரபஜா மடல அர்ச்சனா’ என்று பெயர்.

கோவிலின் தலைமை குருக்களான டாக்டர் சவுந்தரராஜன் மற்றும் சிஎஸ் கோபாலகிருஷ்ணா ஆகியோர் இந்தப் பிரார்த்தனையை கோவிலில் செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர். இது பற்றி அவர்கள் தெரிவிக்கும் போது ‘ வங்கிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பி செலுத்தத் தவறியவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொண்டு வர இந்தச் சிறப்பு பிரார்த்தனை உதவும்’ என்றனர். ‘இது இந்த நாட்டின் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்று. இந்தியர்கள் மிகக் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி செல்கின்றன’ என்று மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக சில்கூர் பாலாஜி கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘ருன விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்’ ஜபித்தனர். இந்த ஸ்தோத்திரம் நரசிம்மரை எழுப்பும் என்பது ஐதீகம்.  மேலும் தலைமை குருக்கள் நாட்டு மக்கள் அனைவரையும் இந்த ஸ்தோத்திரம் சொல்லும் படி கேட்டுக்கொண்டனர். அப்படிச் செய்யும் பட்சத்தில் வங்கிகள் நெருக்கடிகளில் இருந்து நீங்கிச் சரியான பாதையில் செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை.

Related Articles

நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக... ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பா...
பெண்களைப் போல ஆண்களுக்கும் ரத்தப்போக்கு ... யார் இந்த PADMAN? நம்நாட்டில் வெறும் 12% பெண்கள் மட்டுமே நாப்கின் பயன்படுத்துகின்றனர். 88 சதவீத பெண்கள் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... ஹேராம்நடிகர்கள்: கமல் & ஷாருக்கான் (அகழ்வாராய்ச்சியாளர்கள்), ஹேமா மாலினி, ராணி முகர்ஜி, அப்பாஸ்(டாக்டர்),...இயக்கம்: கமல்இசை: இளையராஜ...
இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது! வைரமு... கடந்த ஜனவரி 25ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மவிபூசண் விருது வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனையடுத்து இளையராஜாவுக்கு பலர் வாழ்த்து ...

Be the first to comment on "வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதிராபாத்தில் சிறப்பு பிரார்த்தனை"

Leave a comment

Your email address will not be published.


*