டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!

This is a scam that is ticking up for a fair price!

சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண்
ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள்.

தீபாவளி நாளை முன்னிட்டு ஒயின் ஷாப்பிலும், சர்கார் தீபாவளியை முன்னிட்டு
தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி நாளில் எது அதிகம் வியாபாரம் பார்க்கும்?
சர்கார் ஓடும் தியேட்டர்களா? அல்லது சர்காரை வாழ வைக்கும் ஒயின்ஷாப்புகளா? என்ற
கேள்வி எழும்படி இருந்தது தீபாவளி தினம்.

ஒயின்ஷாப் விவகாரத்தை ஓரம் வைத்துவிடுவோம். என்ன முயன்றாலும் அதற்கு அவ்வளவு
சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கப்போவது இல்லை. காரணம் அரசை வாழ வைப்பதே ஒயின்ஷாப்கள்
தான்.

இந்நிலையில் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களில் விற்ற டிக்கேட் விலை தான்
பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமாக டிக்கெட் விலை எவ்வளவு பெரிய ஏரியாவாக
இருந்தாலும் இருநூறு ரூபாய்க்குள் இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்காக நியமிக்கப்பட்ட
டிக்கெட் விலை ரொம்பவே அதிகம்.

தியேட்டர் முழுக்க வாடையோடும், சரியான கழிவறை வசதி இல்லாமலும், முறையான பார்க்கிங்
வசதி இல்லாமலும் காணப்படக் கூடிய படுமொக்கையான தியேட்டர்களில் கூட குறைந்தபட்ச
விலையாக இருநூறு ரூபாய். டவுன் ஏரியாக்களில் அசால்ட்டாக ஆயிரம் ரூபாய்க்கு வைத்து
விற்கிறார்கள். அதையும் வாங்கிக் கொள்ள அத்தனாயிரம் தலைகள் விடியற்காலையிலயே
எழுந்து வந்து தியேட்டர் முன்பு காத்துக் கிடந்தன.

ரசிகர் மன்றங்களும் தியேட்டர் அதிபர்களும் கூட்ட சேர்ந்துகொண்டு டிக்கெட் விற்ற விலையை
விஜய்யின் பெண் ரசிகர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ச்ச நல்ல நாளு அதுவுமா
படம் பாக்கலாம்னு வந்தா இப்படி அநியாயத்துக்கு டிக்கெட் ரேட் போட்ருக்காங்க… போயி
கம்முனு டிவில போட்ற படத்தையே பார்ப்போம் என்று புலம்பிய படி திரும்பிய பல ஆண்
ரசிகர்கள், பெண் ரசிகர்களை காண முடிந்தது.

இந்தப் படம் முழுக்க நேர்மை நியாயம் என்று அரசியல் மாற்றத்தைப் பற்றி பேசியிருந்தாலும்
படத்திற்கு வெளியே நடப்பதெல்லாம் மகாமட்டமான அரசியல். இவ்வளவு அநியாய விலைக்கு
டிக்கெட் விலையை நியமித்து விற்றால் ஒரு நாளில் முப்பது கோடி வசூல் என்று பெருமையாக
சொல்வதில் என்ன பயன்? சமூக ஆர்வலர்களை அடையாளப்படுத்தறது ஒருபக்கம் இருக்கட்டும்…

முதல்ல உங்க படத்தோட டிக்கெட்ட நியாயமான விலைக்கு விற்க சொல்லுங்க… ஊழல அப்புறம்
ஒழிக்கலாம் என்று வருந்துகின்றனர் உண்மையான சமூக ஆர்வலர்கள்.
டிக்கெட் விலை இவ்வளவு அதிகம் என்றாலும் பெரும்பாலான இடங்களில் கட்அவுட்களுக்கு
பாலாபிஷேகம் செய்யும் வழக்கம் தவிர்க்கப்பட்டு இருந்தது என்பது சமூக ஆர்வலர்கள்
பலருடைய மனதுக்கு இனிய செய்தியாக இருந்தது.

Related Articles

“இன்றைய காந்திகள்” – ப... குக்கூ காட்டுப்பள்ளி நடத்தி வரும் சிவராஜ் என்பவர் நடத்தி வரும் தன்னறம் நூல்வெளி என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியான புத்தகம் தான் பாலசுப்பிரமணியம் முத்து...
துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் ப... கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய பு...
ஊரடங்கு நாட்களில் சினிமா பார்த்து பொழுது... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15, 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதன் காரணமாக நாம் எல்லோரும் வீட்டிலயே முடங்கி கிடக்க வேண்...
இந்த சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறது? நாமெ... மாரடைப்பு, சாலை விபத்து, தற்கொலை இந்த மூன்றும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் அதீத மன உளைச்சல். இப்படி மன உளைச்...

Be the first to comment on "டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில இதுல ஊழல ஒழிப்பாங்களாம்!"

Leave a comment

Your email address will not be published.


*