“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21

world Forest day

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21 ம் தேதி உலக காடுகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் வீடுகள் வளர்கிறதே தவிர காடுகள் வளர்ந்த பாடில்லை.

காடுகள் தினம்

உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. அவற்றில் 60 ஆயிரத்துக்கும் மேல்
தாவர வகைகள் மட்டுமே உள்ளது. நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு
பயன்பாடுகளுக்காக மரங்கள் வெட்டுப்பட்டு வருங்கால சந்ததியினரை இயற்கையுடன்
இணைந்து வாழ முடியாத சூழலில் தள்ளிக்கொண்டிருக்கிறது.

இந்திய காடுகள் கணக்கெடுப்பு அமைப்பு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு
முழுவதும் உள்ள காடுகளின் பரப்பளவு எந்த அளவு பெருகியுள்ளது, குறைந்துள்ளது என்று
கணக்கெடுத்து தகவல் தெரிவிக்கும். அவ்வகையில் பல்வேறு மாநிலங்களில் காடுகளின்
பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவு காடுகள்
இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை அடைய
வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் சாத்தியமே இல்லாத வகையில் பல இடங்களில் மரம்
நடுதலில் ஊழல்கள் நடந்து வருகிறது.

மரம் நட்டதாக மோசடிகள்

மரம் நடுதல் திட்டப்பணிகளுக்காக அரசின் சார்பில் குறிப்பிட்ட அளவு நிதி பெறப்பட்டு மரம்
நடாமலே மரம் நடப்பட்டதாக மோசடிகள் பல நடந்து வருகிறது.

அவ்வாறே திருநெல்வேலி கீழப்பாவூர் என்ற ஒரு இடத்தில் மட்டுமே 150 மரம் கூட ஒழுங்காக
நடப்படாத நிலையில் அங்கு 21 லட்சத்து ஆராயிரம் ரூபாய் கல்வெட்டைப் பதித்து
வைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக சிவகங்கை சாக்கோட்டை எனும் இடத்தில் மட்டும் 356 மரம் நட்டதாக கணக்கு
காண்பித்து எட்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை மோசடி செய்திருக்கிறார்கள்.

மக்கள்தொகைப் பெருக்கம்

காடுகள் குறைந்து வருவதற்கு முக்கிய காரணமாக மக்கள் தொகைப் பெருக்கம் இருந்து வருகிறது. மனிதன் தனது குடியிருப்பு தேவைக்காக காடுகளை வீடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறான். தனது தேவைக்கான பொருட்களின் தயாரிப்புக்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக காடுகளை அழித்து வருகிறான். ஒசூர் பகுதிகளில் பல காடுகள் இருந்த இடங்கள் இன்று தொழிற்சாலைகளாக மாறி வருவதால் அங்குள்ள யானைகள் சாலையில் அடிப்பட்டு இறந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளின் சாபம் மனிதர்களை சும்மா விடப்போவதில்லை.

Related Articles

இதாங்க ஆயிரத்தில் ஒருவன் படத்தோட கதை!... இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே. சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.ஒரு குக்கிராமம்... தற்போதைய தஞ்சாவ...
அரசுப் பள்ளியை தத்தெடுத்த பத்தாம் வகுப்ப... பள்ளி, கல்லூரி நாட்களில் நமக்குத் தரப்படும் சிறிய அளவிலான திட்டப்பணிகளை எப்படிச் செய்து முடித்தோம் என்று நினைவிருக்கிறதா? பல நேரங்களில் நம் அம்மாவோ அப...
இலவசம் சரியானது என்பவர்களுக்கு சீமானின் ... தி. மு. க மற்றும் அ. தி. மு. க அரசு இரண்டும் மாற்றி மாற்றி இதுவரை இலவசமாக கொடுத்த பொருட்கள் என்னென்ன என பார்ப்போம். மதிய உணவுத் திட்டம்: ஏழைகள் சாப...
கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்ப... திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிர...

Be the first to comment on "“வீடுகள் பெருகுகிறதே தவிர காடுகள் பெருகவில்லை ” – இன்று உலக காடுகள் தினம் – மார்ச் 21"

Leave a comment

Your email address will not be published.


*