விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்

விநாயகர் என்றவுடன் நமக்கு நினைவில் வருவது அவரின் பானை வயிறும், அவர் கையில் இருக்கும் மோதகம். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்த ஒன்று.

கொழுக்கட்டை மட்டுமில்லாமல் விநாயகருக்கு அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால்,தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நைவேத்யங்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம்.

முதன் முதலாக கொழுக்கட்டை நிவேதனம் செய்தவர் யார் தெரியுமா? வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி

பூரண கொழுக்கட்டையில் ஒரு தத்துவம் மறைந்துள்ளது. கொழுக்கட்டையில் மேலே மாவும் உள்ளே பூரணமும் இருக்கும். மேலே இருக்கும் மாவுபொருள் அண்டம்; உள்ளே இருக்கும் வெல்லப் பூரரணம் தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும். இது தான் கொழுக்கட்டையின் தாத்பர்யம்.

கொழுக்கட்டை செய்முறை

எல்லாவித  கொழுக்கட்டைகளுக்கும் மேல்மாவு ஒன்று தான். பூரணம் செய்முறை மட்டுமே மாறுபடும்.

மேல்மாவு செய்யும் முறை

முதலில்  பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி நிழலில் ஒரு சுத்தமான துணியில் உலர்த்தவும். பின்பு உலர்ந்த அரிசியை மாவாக திரித்துக் கொள்ளவும் .
ஒரு கப் மாவிற்கு 2 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அரிசி மாவு கரைசலை விட்டு, அதை கட்டி தட்டாமல் கரண்டியால் கிளறி விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.
மேல்மாவு மென்மையாக இருப்பதற்காக, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைத் தண்ணீரில் விடவும்.

தண்ணீரும் மாவும் நன்றாகக் கலந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும்.

மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும், மாவை இறக்கி வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிட வேண்டும். இப்போது கொழுக்கட்டைக்கு மாவு தயார ்.

 பூரணம் செய்ய:

ஒரு முற்றிய தேங்காயைப் பூப்போல் துருவிக் கொள்ளவும்.

1/4 கிலோ வெல்லத்தை நன்கு தட்டிக் கொள்ளவும்

ஒரு கப் தேங்காய் துருவலுக்கு ஒரு கப் வெல்லம் எடுத்துக் கொள்ளவும். (1:1)

வெல்லம் மூழ்கும் அளவி தண்ணீர் விடவும்.

தேங்காய்ப சேர்த்து அடுப்பை நிதானமாக எரியவிட்டு கிளறவேண்டும்.
வெல்லமும் தேங்காயும் கலந்து ஒட்டாமல் வரும் பதத்தில், 10 ஏலக்காய்களைப் பொடி செய்து சேர்த்துக் கிளறி இறக்கி வைத்து விடவேண்டும்.

இப்போது பூரணம் தயார்.
அரை மணி நேரம் கழித்து பூரணத்தை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும்.

மாவை சிறிய எலுமிச்சம் பழ சைஸில் (கையில் நல்லெண்ணெய் தடவிக் கொண்டு) உருட்டி கிண்ணம் போல் செய்து கொள்ளவும். பூரணத்தை அதில் வைத்து, பூரணம் வெளியில் தெரியாதவாறு மூடி வைத்து விடவேண்டும்.

.இம்மாதிரி 10 கொழுக்கட்டைகள் செய்தபின் குக்கரில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் வைத்து வெயிட் போடாமல் 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்

ஆறியபின் கொழுக்கட்டைகளை எடுக்க வேண்டும்.

Related Articles

வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் ... மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானி...
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் பெற்ற... கல்வியில் பின் தங்கிய நாடுகள் எப்பாடுபட்டாவது தங்கள் நாட்டுக் குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்க்க பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்...
பெட்ரோல் விலை உயர்வு குறித்து நெட்டிசன்க... பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் விரைவில் நூறு ரூபாயை எட்டி விடும் என்று வாகன ஓட்டிகள் வருத்தத்தையும் அதிருப்...
மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட... " வா கங்காரு... " " கங்காரு இல்லடா... கங்கா தரன்... " * தரன் தரன் னு பேருல மட்டும் கங்கா தரன் காவிரி தரன்னு வச்சிக்கிட்டு கொடுத்த பணத...

Be the first to comment on "விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் நைவேத்யம்"

Leave a comment

Your email address will not be published.


*