தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள் உலாவ மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றனர். அதற்குள் தமிழக மக்களின் தலையில் இன்னொரு குண்டு விழுந்துவிட்டது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் பகுதியில் சாதி வெறி பிடித்த சிலர் வேறு சாதி இளைஞர்கள் சிலரை மனிதாபமானமின்றி வெட்டி கொன்று உள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி இன்று காலையில் இருந்து செய்திகள் உலாவ #தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது? என்று கேள்வி எழுப்பி அதனை சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டம் மட்டும் அல்ல. தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும் சாதி, மதம் ரீதியான வெட்டுக்குத்து, கலவரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் உண்டு. அடுத்த சில நாட்களில் மறைந்து போவதும் உண்டு. இப்போது அதிக அளவில் சாதி வன்முறை குறித்து இளைஞர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Related Articles

சிரியா போரில் இறந்துபோன பிஞ்சு உயிர்களுக... இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பரியேறும் பெருமாள். அந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் "...
இவ்வளவு தாங்க வாழ்க்கை ! – அனைவரும... நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் வாழ்க்கையில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கிறதா? என்று மனத்தெளிவு இல்லாதவர்கள் இந்த கேள்வி பதில் தொகுப்பை கட்டாயம் பட...
கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம்... ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் ...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...

Be the first to comment on "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!"

Leave a comment

Your email address will not be published.


*