தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!

தூத்துக்குடி பிரச்சினை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதன் தாக்கம் அவ்வளவு கொடூரமானதாக இருந்தது. அதனால் தான் எவராலும் அதனை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. கடந்த இரண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று செய்திகள் உலாவ மக்கள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப முயன்றனர். அதற்குள் தமிழக மக்களின் தலையில் இன்னொரு குண்டு விழுந்துவிட்டது.

 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் பகுதியில் சாதி வெறி பிடித்த சிலர் வேறு சாதி இளைஞர்கள் சிலரை மனிதாபமானமின்றி வெட்டி கொன்று உள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி இன்று காலையில் இருந்து செய்திகள் உலாவ #தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது? என்று கேள்வி எழுப்பி அதனை சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

சிவகங்கை மாவட்டம் மட்டும் அல்ல. தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும் சாதி, மதம் ரீதியான வெட்டுக்குத்து, கலவரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் உண்டு. அடுத்த சில நாட்களில் மறைந்து போவதும் உண்டு. இப்போது அதிக அளவில் சாதி வன்முறை குறித்து இளைஞர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Related Articles

சட்டக்கல்லூரியில் படித்து டாக்டர் ஆகணும்... Pariyerum Perumal (2018) - IMDB Rating - 9.6/10 எல்லா ஊரிலும் கூட்டம் அதிகம் கூடாத ஒரு தியேட்டர் இருக்கும். காரணம் அந்த தியேட்டர்களில் மட்டும் தான் ந...
நோட்டு கொடுக்கலனா நோட்டாவுக்குத் தான் ஓட... அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்... தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் துணை முதல்வர் பரப்புரையில் கலந்துகொள்ள பெண்களுக்கு பணம்?...
தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால்விட்ட சன் பிக்ச... தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்தப் படத்தை இணைய...
டேட்டிங் வசதியை அறிமுகம் செய்கிறது பேஸ்ப... செவ்வாய்க்கிழமை நடந்த பேஸ்புக் F8 டெவலப்பர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேஸ்புக்கின் சிஇஓ மார்க் ஸுக்கர்பேர்க், டேட்டிங் செய்பவர்களுக்கான பிரத்யேக ...

Be the first to comment on "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து சிவகங்கை அரிவாள் வெட்டு! – தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியாச்சாமே!"

Leave a comment

Your email address will not be published.


*