சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!

chengalpattu-court-delivers-judgement-today-on-haasini-murder-case

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங்கள் ஓராண்டு ஆன பிறகு கிடைத்துள்ளது.

சிறுமி ஹாசினி வீட்டின் அருகில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார்.

தலைமறைவானவரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்‌தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு மீண்டும் தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹாசினி  கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 14ஆம் தேதி இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடத்தல், பாலியல், கொலை, மிரட்டல் என்று ஐந்து வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தஷ்வந்தை குற்றவாளி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் தண்டனை பற்றிய விவரங்களை ஒரு மணிநேரத்திற்கு ஒத்தி வைத்தது. பிறகு நீதிபதி வேல்முருகன் தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிறுமியின் தந்தையை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் “கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எனது கோரிக்கை” என்று தெரிவித்தார். ஹாசினியின் வழக்கறிஞரோ தஷ்வந்த்தின் வயது இருபதுகளில் இருப்பதால் தூக்கத்தண்டனைக்குப் பதிலாக இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் ஹாசினியின் பெற்றோர் விருப்பபடியே தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

Related Articles

அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...
ராசிபுரம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும்... "ராசிபுரம்" இந்த ஊர் பெயரை கேட்டாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது "டாக்டருக்கு படிக்க வைக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பியுள்ள ஊர்/படிப்பு சொல்லி தரேன...
மத்திய தமிழகத்தில் 40 டிகிரி செல்ஸியஸ் வ... மத்திய தமிழகத்தில் வெப்பம் நாற்பது டிகிரி செல்ஸியஸாக பதிவாகி இருக்கிறது. மத்திய வானிலை துறையின் சென்னை கிளையின் தரவுகளின் அடிப்படையில் திருச்சியில் அத...
மும்பை இந்தியர்கள் (MI) 2018 ஐபிஎல் அணி...  வரிசை எண் போட்டி எண் தேதி மும்பை இந்தியர்கள் போட்டிகள் நேரம் இடம்1 1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 7...

Be the first to comment on "சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு தூக்கு தண்டனை!"

Leave a comment

Your email address will not be published.


*