தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான முறையில் விதிகளைப் பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி பொதுமக்களில் சிலரை ஸ்நைப்பர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டுத்தள்ளி பேரதிர்ச்சி கொடுத்தது சர்வதிகார அரசு.

 

இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். அவர்களில் சிலர் இருபது வயதுகள் உடைய இளம் வயதினர். அவர்கள் இப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டிருக்க ஆரம்பித்திருப்பார்கள். அதற்குள் அவர்களுடைய வாழ்க்கையை வலுக்கட்டாயமாக முடிப்பது எந்த விதத்தில் நியாயம். உடனே தமிழகம் முழுக்க கலவரமும் ஆர்ப்பாட்டமும் வேலைநிறுத்தமும் கடையடைப்பும் நடத்திய பிறகே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.

 

இதனை மக்கள் போராட்டமாகத் தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கை பார்த்துவிட்டு காலம் கழித்துக் கொண்டு இருந்தது. குரல்கள் பல மடங்காக ஒலிக்கவே நிரந்தர தீர்வு கிடைத்து உள்ளது. இருப்பினும் போராட்டக் களத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு பதில் என்ன? லட்சக் கணக்கில் உயிரிழப்புத் தொகை கொடுத்தால் மட்டும் போதுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

 

அவர்களுக்கு நீதி வேண்டி பல குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நீதிமன்றங்கள் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்வருக்கு கோடிக் கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்து நினைவகங்கள் அமைப்பது இருக்கட்டும். இந்த சாமான்யர்களுக்கு அரசு தனது சொந்த செலவில் நிச்சயமாக நினைவகம் அமைத்து தர வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Articles

பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய த... பிள்ளை வளர்ப்பு என்பதைப் பற்றி இன்னமும் சில பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. அதை எதோ ஒரு தொந்தரவுக்கு உரிய செயலாகவே பார்க்கின்றனர். அப்படிபட்ட பெற்றோர்கள்...
பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் உபயோகிப்பதை தவ... சுதந்திர தான விழாவின் போதும் குடியரசு தின விழாவின் போதும் ஏகப்பட்ட பிளாஸ்டிக் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது. அந்த இரண்டு நாட...
பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...
சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து காத்தி... சினிமா என்பது ஒரு மிகப்பெரிய ஊடகம், சினிமா என்பது ஒரு மிகப்பெரிய மாயவலை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்போது சினிமா எ...

Be the first to comment on "தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?"

Leave a comment

Your email address will not be published.


*