தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொண்ணூற்று ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. சரியாக நூறாவது நாள் வரும் போது எந்த முன் அறிவிப்பும் இன்றி, சரியான முறையில் விதிகளைப் பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி பொதுமக்களில் சிலரை ஸ்நைப்பர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சுட்டுத்தள்ளி பேரதிர்ச்சி கொடுத்தது சர்வதிகார அரசு.

 

இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் அநியாயமாக உயிரிழந்தனர். அவர்களில் சிலர் இருபது வயதுகள் உடைய இளம் வயதினர். அவர்கள் இப்போது தான் வாழ்க்கை என்றால் என்ன என்று தெரிந்து கொண்டிருக்க ஆரம்பித்திருப்பார்கள். அதற்குள் அவர்களுடைய வாழ்க்கையை வலுக்கட்டாயமாக முடிப்பது எந்த விதத்தில் நியாயம். உடனே தமிழகம் முழுக்க கலவரமும் ஆர்ப்பாட்டமும் வேலைநிறுத்தமும் கடையடைப்பும் நடத்திய பிறகே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.

 

இதனை மக்கள் போராட்டமாகத் தொடங்குவதற்கு முன்பே தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் வேடிக்கை பார்த்துவிட்டு காலம் கழித்துக் கொண்டு இருந்தது. குரல்கள் பல மடங்காக ஒலிக்கவே நிரந்தர தீர்வு கிடைத்து உள்ளது. இருப்பினும் போராட்டக் களத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு பதில் என்ன? லட்சக் கணக்கில் உயிரிழப்புத் தொகை கொடுத்தால் மட்டும் போதுமா? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

 

அவர்களுக்கு நீதி வேண்டி பல குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நீதிமன்றங்கள் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்வருக்கு கோடிக் கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்து நினைவகங்கள் அமைப்பது இருக்கட்டும். இந்த சாமான்யர்களுக்கு அரசு தனது சொந்த செலவில் நிச்சயமாக நினைவகம் அமைத்து தர வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

Related Articles

இந்த பாட்டுக்காக யுவனுக்கு தேசிய விருது ... யுவனுக்கு ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது யுவன் ரசிகர்களின் மனதிற்குள் பல நாட்களாக இருக்கும் கேள்வி. ஒரு ரசிகர் அந்தக் கேள்வியை பேரன்பு ...
அர்ஜூன் ரெட்டியை ஓரங்கட்டிய எனை நோக்கி ப... தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் & ஒன்றாக எண்டர்டெயின்மென்ட்ரிலீஸ் : வேல்ஸ் பிலிம் இண்டர்நேசனல் ஐசரி கணேஷ்எழுத்து இயக்கம் : கௌதம் வாசுதே...
தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வ... சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியமா?சாப்பாடு முக்கியம்... அப்புறம் எனக்குப் பசிக்குமல்ல சாப்புடக்கூடாது... என்ற சிறுவனை நாம் அவ்வளவு எளிதாக மறக்க...
பெண்களின் பேராதரவுடன் நேர்கொண்ட பார்வை! ... அஜித் என்ட்ரி ரொம்ப சிம்பிளாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அஜித் திரையில் வரும்போது விசில் சத்தம் காதை கிழிக்கிறது. கை நடுங்கிக்கொண்டே காபி ...

Be the first to comment on "தூத்துக்குடி போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவகம்?"

Leave a comment

Your email address will not be published.


*