வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி

14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் விஜயவாடாவைச் சேர்ந்த நான்கே வயதான ஆருஷ் ரெட்டி.  இந்திய சாதனை புத்தகம்(Indian Book of Records) மற்றும் ஆசிய சாதனை புத்தகம்(Asian Book of Records) ஆகியவற்றின் தீர்ப்பாளரான பிஸ்வதீப் ராய் சவுத்ரி முன்னிலையில் இந்தச் சாதனை வால்கா வில்வித்தை அகாடெமியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

‘நிகழ்வில் ஆருஷ் ரெட்டியின் திறமையைப் பார்த்தபோது அவன் 100 அம்புகள் வரை எய்யக்கூடும் என்று தான் கணித்தேன். ஆனால் அவன் 14 . 40 நொடிகளில் 15 மீட்டர்கள் தொலைவுக்கு 118 அம்புகள் எய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். இது அதிக அளவுக்கு ஊக்கத்தைத் தருகிறது மேலும் மிகவும் பாராட்டத்தக்கது’ என்று இந்திய சாதனை புத்தகத்தின் சார்பாக சான்றிதழை வழங்கிய பிஸ்வதீப் தெரிவித்தார்.

‘எட்டு மாதங்களாக ஆருஷ் ரெட்டி அகாடெமியில் பயிற்சி பெற்று வருகிறான். அவனை ஒரு நம்பிக்கையான தொழில்முறை வில்லனாக வளர்ப்பதற்குப்  பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன் ‘ என்று வால்கா வில்வித்தை அகாடெமி தலைவர் செருகூரி சத்தியநாராயண தெரிவித்தார்.

Related Articles

நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்கா... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர...
விஸ்வரூபம் 2 படத்துக்கு வந்த புதிய பிரச்... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த விஸ்வரூபம் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளை சந்தித்தது. அதனால் கடும் மன உளைச்சலுக்கான கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவ...
கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் ... அவ்வை சண்முகிஇயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார்நடிகர்கள்: கமல்(அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர்), மீனா, ஜெமினி கணேசன், மணிவண்ணன்(முதலியார்), (பெரும்பாலான  க...
H1B விசா வைத்திருப்பவர்களை இந்தியா அன்ப... சென்னை ஜெமினி சர்க்கிளில் ஒரு காட்சி. பல லகரங்கள் மதிக்கப்படும் ஒரு உயர்தர காரில் இருந்து அந்தப் பெண் இறங்கினார். கையில் தனது திருமண ஆல்பத்தை கொண்டிரு...

Be the first to comment on "வில்வதையில் தேசிய அளவில் சாதனை படைத்த நான்கு வயது ஆருஷ் ரெட்டி"

Leave a comment

Your email address will not be published.


*