விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு

agriculture

நாட்டின் இளைய மாநிலமான தெலங்கானா 2014ல் உருவானபோது மின்பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்தது, தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்திட்டுள்ளது.

நாட்டிலேயே முதல் மாநிலம்

இருபத்து நாலு மணிநேரமும் இலவச மின்சாரத்தை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை தெலங்கானா பெற்றிருக்கிறது. மக்களுக்கான புத்தாண்டு பரிசாக இந்தத் திட்டத்தை புத்தாண்டிலிருந்து செயல்படும் வண்ணம் தெலுங்கனா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதன்மூலம் நாட்டிலுள்ள  இருபத்து மூன்று லட்சம் பம்புகள், இருபத்து நாலு மணிநேரமும் செயல்படும்.

இந்தத் திட்டத்தால் விவசாயிகளின் விரக்தி களையப்பட்டு, வளர்ச்சிக்கான குறியீடான ‘தங்க தெலங்கானா’ என்று கனவை நோக்கிச் செல்ல விவசாயிகள் ஊக்குவிக்கப் படுவார்கள் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவானபோது மிக அதிகளவில் மின் பற்றாக்குறை இருந்து வந்தது. ஆனால் அந்த நிலை மிக விரைவிலேயே சரிசெய்யப்பட்டு மின்தடை இல்லாத மாநிலமாக தெலங்கானா உருவானது. ஏற்கனவே ஒன்பது மணிநேரம் இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்குத் தந்துவந்து அரசு, இப்போது அதை இருபத்து மணிநேரமாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அம்மாநில முதல்வர் ராவ், மின்துறை அதிகாரிகளைப் பெரிதும் பாராட்டினார். ‘இவர்களின் அசாத்திய திறமையால், மின்பற்றாக்குறை கொண்ட மாநிலத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளனர்’ என்று பாராட்டினார். அவர்களது திறமையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு சம்பளவு உயர்வையும் அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர்.

இப்போதைக்கு தெலங்கானா 14845  மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரித்து வருகிறது, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கூடுதலாக 13000  மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவிருக்கிறது. 2022 ஆண்டு  வாக்கில் 22000 மெகா வாட் மின்சாரம் கொண்ட மாநிலமாக தெலங்கானா அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னது தமிழ்நாட்டிலும் இதே மாதிரியா? மூச்.

Related Articles

கே எல் ராகுல் நடித்த வெண்ணிலா கபடி குழு ... 2009ல் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு சரண்யா மோகன் நடிப்பில் வி. செல்வ கணேஷ் இசையில் வெண்ணிலா கபடி குழு முதல் பாகம் வெளியானது. இப்போது பத்து வருடங்கள்...
தமிழகத்தில் மட்டும் இதுவரை 2000ம் அரசு த... தெருவுக்கு தெரு கிட்ஸ் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல், இன்ஜினியரிங் காலேஜ் என்று கல்வி கொள்ளை கூட்டங்கள் பல்கிப் பெருகி கிடக்கிறது. இப்படி கொள்ளை கூட்டங்கள் ...
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் அதை எப்படி ... அல்சர் முதலில் எப்படி ஏற்படுகிறது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படும் அமிலத்தன்மையின் அதிகமான செயல்பாடுகளால் அல்சர் ஏற்படுகிறது என்று கூறுகி...
உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளை... முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாள...

Be the first to comment on "விவசாயத்துக்கு இருபத்து நாலு மணிநேர இலவச மின்சாரத்தைத் தருகிறது தெலங்கானா அரசு"

Leave a comment

Your email address will not be published.


*