துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்

Fishermen

கன்னியாகுமரி மீனவர்கள் தற்போது ஓகி புயலுக்கு இரையாகிப்போனதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாத சுயநலம் பிடித்த மனிதர்களாகிய நாம் நம்முடைய பாவங்கள் கழிய புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்தை நோக்கி பயணிக்கிறோம். இராமேஸ்வரத்தில் வாழும் மீனவர்களின் குடும்பம் தினம்தினம் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கையில், சகமனிதனின் துன்பத்தை வேடிக்கையாக கடந்து வரும் நாம் மேற்கொள்ளும் இராமேஸ்வர புனிதப்பயணத்தில் என்ன பலன் இருக்கிறது என்பது புரியாத புதிர்.

எவன் வாழ்ந்தால் என்ன வீழ்ந்தால் என்ன சிறப்பு தரிசனத்தில் நமக்காக மட்டுமே கடவுளை வணங்கிவிட்டு வரும் நமக்கு எதுக்கு இதெல்லாம் என்றெண்ணம் கொண்டவர்களுக்குத்தான் இந்த நிமிட கட்டுரை.

இலங்கை இராணுவ படையின் துப்பாக்கிகளுக்கு தொடர்ந்து இரையாகிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் பற்றிய கருத்தை தனது தரமணி படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் ராம். விளம்பரத்திற்காக  படத்தின் போஸ்டர்களில் அரசியல் பேசிகிறார் என நினைத்திருந்த நிலையில், படத்தில் ஆழமான அரசியலை பேசி உண்மையாகவே கவனத்தை ஈர்க்கிறார். தங்களுடைய படைப்புகளில் இலங்கை என்றே குறிப்பிடவதற்கு, மற்ற இயக்குனர்கள் தயங்கிகொண்டிருக்கையில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றது என்றும், கடந்த ஓராண்டுகளில் மட்டும் 24வது முறை இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், தன்னுடைய படத்தில் காட்சி வரும்படி இயக்குனர் ராம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை சென்னையில் துவங்கும். இந்த சென்னையில் மழைபெய்ய வேண்டி ராமேஷ்வரத்தில் உள்ள மீனவப்பெண்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பார்கள். அப்படி மழை பெய்தால் தான், சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் போட்டி ரத்தாகும். ஒருவேளை மழைபெய்யாதிருந்து இந்தியா வெற்றி பெற்றுவிட்டால், ராமேஸ்வர கடலுக்குள் மீன்பிடிக்க சென்றிருக்கும் இந்த பெண்களின் சொந்தக்காரர்களை இலங்கை ராணுவம் ஓரின வன்புணர்ச்சிக்கு உட்படுத்தலாம், சுட்டுக்கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பெண்கள் வேண்டியதால் மழை பெய்ததா இல்லை தானாக மழை பெய்ததா தெரியாது, சென்னையில் மழைபெய்ய தொடங்கும். ஆனால் இந்தியா தோல்வி அடையாமல்டக்வொர்த் முறையில் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட, இலங்கை இராணுவப்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர் என்று தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகும். இப்படி தன் கருத்தை அனைவரின் கவனத்தை ஈர்க்கும்படி பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ராம். [ தரமணி படத்தின் துவக்க காட்சியை பார்த்தால் இது தெளிவாக புரியும் இயக்குநர் ராமின் குரலில்.]

இதற்கு முன்பு இனம், மெட்ராஸ் கபே போன்ற படங்கள் தமிழக இலங்கை அரசியலை பேசுகிறேன் என்று எதேதோ பேசி பலரின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்தது. ஏழாம் அறிவு, மரியான் போன்ற படங்கள் இந்த விஷியத்தை சொல்ல முயற்சித்து சொல்லாமல் போனது. ஆனால் தரமணி தன்னுடைய கருத்தை நியாயமாக முன்வைத்துள்ளது.

இதை சொல்ல வேண்டும் என்ற ராமின் எண்ணத்திற்கும், தயாரிப்பாளர் ஜே. சதிஷ்குமாரின் துணிச்சலுக்கும் தமிழர்களாகிய நாம், நிச்சயம் ஒரு ராயல் சல்யூட் அடித்தாக வேண்டும்.

இராமேஸ்வரம் என்றால் புண்ணியதலங்களையும் கலாமையும் நினைவுகொள்ளும் நாம் அங்கு வாழ்ந்து வரும் மீனவர்களை பற்றியும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வேண்டும். அங்கு வாழ்பவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் என்பதால்!

Related Articles

வசந்தத்தை வண்ணங்களால் வரவேற்கும் ஹோலி பண... நெருக்கடியான வாழ்வில் ஒரு இளைப்பாறுதலை, நிழலை நமக்குப் பண்டிகைகளே தருகின்றன. சிறு வயதில் நமது ஊர்களில் கொண்டாடிய பண்டிகைகள் இன்னமும் நம் மனதில் பசுமைய...
இந்த உலகம் ஜெயிச்சுடுவேன்னு சொன்னா கேட்க... கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிக முக்கியமான படம் கனா. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து மிக அழகாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இ...
மனித தன்மை மட்டும் மாறாது! – கோமாள... சின்ன வயது கதாபாத்திரத்துக்காக உடலை குறைத்துள்ளார் ஜெயம் ரவி. மிக அழகாக உள்ளது அந்த தோற்றம். மூன்று செம்மொழிகள் கூறு என்று ஆசிரியை கேட்டதும்  தேன்மொழி...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்சார்?... இந்தியாவில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு இந்திய சென்சார் குழு சான்றிதழ் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையிலோ, குறிப்பிட்ட நபரை தாக்...

Be the first to comment on "துப்பாக்கிக்கு இரை! – தரமணி படம் பதிவு செய்த கவனிக்க வேண்டிய விஷியம்"

Leave a comment

Your email address will not be published.


*