கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா?

kamal

கடந்த டிசம்பர் 31ம் தேதி ரஜினியின் அரசியல் அறிவிப்பு முதல் தொடங்கியது இந்த ஆண்டிற்கான பரபரப்பு பையர். அன்று முதல் இம்மியளவும் பரபரப்புக்கு பஞ்சமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கமல், ” கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கக்கூடாது. தியானம் செய்வது அவர் கடமை. எழுந்து நிற்பது என் கடமை ” என்று அந்தக்கேள்விக்கு பதிலளித்தார். அவருடைய இந்த பதில் வழக்கம் போல பலருக்கு புரியவில்லை. இவர் தப்புனு சொல்றாரா? சரின்னு சொல்றாரா? தமிழ்த்தாய் வாழ்த்தை மதிக்காதவருக்கு முட்டுக்குடுக்கிறாரா? அவர்களின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறாரா? என்று தெரியாமல் சிலர் குழம்பி நிற்க, ஒரு சிலரோ ” டேய், இந்த கமல் மறுபடியும் எதோ புரியாத மாதிரி சொல்லிருக்கான்டா… வா அந்தாள வச்சு செய்வோம் ” என்ற கணக்கில் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கக்கூடாது என்கிறீர்கள் அப்புறம் எதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்து வியாபாரம் செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

கமல் என்ன பொருளில் சொன்னார்?

கமல் டிவிட்டுக்கு உரை எழுதும் சிலர்,

விஜயேந்திரர் பிரச்சினை குறித்து கமலிடம் கேள்வி எழுப்பப்படும்போது உண்மையில் அவருக்கு அந்த விவகாரம் தெரியவில்லை. கேட்ட கேள்விக்கு, பிற மொழிகளை மதிக்கத்தெரியாதவர் இருக்கும் இடங்களில் எதற்கு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை ஒலிக்கச் செய்தீர்கள், ஒலிப்பது தமிழ்த்தாய் வாழ்த்து எனத்தெரிந்தும் எழுந்து நிற்காமல் தியானம் செய்வது அவர் கடமை என்றால் என் தாய்மொழி வாழ்த்து ஒலிக்கும்போது எழுந்து நிற்பது என் கடமை. அவர்கள் அப்படித்தான், நான் இப்படித்தான் என்ற பொருளில் கூறியிருக்கிறார். ஆளுநர் கலந்துகொள்ளும் விழா, தமிழ் சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழா எப்படி கண்ட இடமாகும் என்ற கேள்விக்கும், அமைச்சர்கள் எழுதி கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் ஆளுநர் இருக்கும் இடத்தை கண்ட இடமாக, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழாமல் இருந்த விஜயேந்திரரை எழுந்திரிக்க அறிவுறுத்தாத தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவை அவர் கண்ட இடம் என்று கூறவில்லை. அவர் இந்த பதிலை கூறும்போது தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரம் அறிந்திருக்கவில்லை. அவர் கொடுத்த பேட்டியின் வீடியோவை பார்த்தால் இது நன்கு புரியும். அவருக்கு நிலவரத்தை தெளிவாக புரிய வைத்ததே பத்திரிக்கை நிரூபர் தான்.

ஆக கமலை விமர்சிப்பது வெட்டி வேலை. காலையில் இட்லி சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு என்று கமல் சொன்னால் இட்லி சாப்பிடுபவர்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கமல் சொன்னதாக திரித்துவிடுகிறார்கள். எப்படி வைகோவும், விஜயகாந்தும் எந்த கருத்து தெரிவித்தாலும் அதை காமெடியாக்கி நல்ல தலைவர்களை இழந்துகொண்டிருக்கிறார்களோ அதே தவறை தான் கமல் விசியத்திலும் செய்கிறார்கள். கமலை முதலில் காலி செய்ய வேண்டும், கேள்வி கேட்க ஆளில்லாமல் போக வேண்டும் என்பதே எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

அகில உலக ஆணழகனின் அம்மா அப்பா யார்? இந்த... சர்கார் படம் குறித்து பிரச்சினை எழுந்த காலத்தில் இருந்தே இந்த மூட்டைப் பூச்சியின் தொந்தரவு இணையத்தை உபயோகிப்போருக்கு இருந்து வருகிறது. கொஞ்சம் கோபத்த ...
கூகுளின் அடுத்த அவதாரம் – செயற்கை ... கைப்பேசியில் நிழற்படம் எடுத்து எடுத்து உங்களுக்கு போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். தேடுபொறி இயந்திரமாக இணைய உலகிற்கு...
பூனை குறுக்க போனா என்ன? போய் பொழப்ப பாரு... வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து, அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு நீங்கள் வீடு வந்து சேரும் வரை, உங்களைச் சுற்றி எத்தனை நம்பிக்கைகள...
குழந்தை தொழிலாளர்கள் பற்றி சொன்ன வாகை சூ... 1.குழந்தைத் தொழிலாளர்கள் –குட்டி, வாகை சூடவாஇந்தியாவில் பல ஆண்டுகளாக மாறாமல் சில விஷியங்கள் உள்ளது. அவற்றில் முதன்மையானது குழந்தைத் தொழிலாளர்கள் ப...

Be the first to comment on "கமல்ஹாசனை காலி செய்யணும்! – வைகோ, விஜயகாந்த்க்கு நடப்பது தான் கமலுக்கும் நடக்கிறதா?"

Leave a comment

Your email address will not be published.


*