ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்

ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சம்ரதா கிராமத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. தடபுடலான சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் நிறைந்த அந்தத் திருமணத்தில் பக்கத்திலிருக்கும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விருந்தாளிகள் வந்திருந்தனர். பெருங்கூட்டத்திற்கு நடுவே சிரித்த முகத்துடன் மணமகன் ஆடையுடுத்தி  நின்றிருந்தார் சுக்ராம் பைரவா. இதில் என்ன செய்தி இருக்கிறது என்கிறீர்களா?

இரண்டாவது திருமணம்

பைரவாவுக்கு இது இரண்டாவது திருமணம். முதல் மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறார். ஆனால் அவரால் ஒரு ஆண் பிள்ளையை பெற்றுத் தர இயலவில்லை என்ற ஒரே காரணத்திற்காக , முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பைரவா, அதுவும் தன்னை விட ஐம்பத்து மூன்று வயது சிறிய பெண்ணை மணந்து கொண்டுள்ளார், கிட்டத்தட்டத் தன்னை விட அரை நூற்றாண்டு சிறிய வயது பெண். பைரவா மற்றும் அவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது மகன் சிக்கலான நோய் காரணமாக இறந்து போனான்.

ஆண் வாரிசுக்காக

இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். தற்போது பைரவாவுக்கு இருக்கும் பெரும்பகுதி நிலங்களையும், சொத்துக்களையும், டெல்லியில் இருக்கும் மனையையும் தனக்கு பிறகு பார்த்து கொள்ள ஒரு ஆண் வாரிசு தேவை என்பதால் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார் அவர். ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுப்பது ஒன்றே இந்தத் திருமணத்தின் ஒரே நோக்கம், அதுவும் முதல் மனைவி அனுமதியுடன்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது என்பது சட்டப்படி குற்றமாகும். செய்தி நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. கூடுதல் மாவட்ட நீதிபதியான ராஜ்நாராயண் சர்மாவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட ஆட்சியர் விடுப்பில் இருப்பதாகவும், விரைவில் அந்தக் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரண்டாவது திருமணத்தில் ஆண் குழந்தை தான் பிறக்கும் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா என்ன?

Related Articles

காகிதம் சேர்ப்பவரின் மகன் மருத்துவ படிப்... மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது விஜய்கஞ்ச் மண்டி. இப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சேகரித்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர் ரஞ்சித் மற்ற...
நாற்பதிற்கும் மேற்பட்டோருக்கு ஹெச்ஐவி கி... உத்தர பிரதேசம் மாநிலம் பங்காரமு என்ற டவுன் பகுதியில் இருப்பவர் ராஜேந்திர யாதவ் . தனது வண்டியில் கிளம்பி கிராமம் கிராமமாக சென்று மருத்துவம் பார்ப்பதே அ...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...
பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...

Be the first to comment on "ஆண்பிள்ளைக்காக 30 வயது பெண்ணை திருமணம் செய்த 83 வயது முதியவர்"

Leave a comment

Your email address will not be published.


*