நொந்து போன Aircel பயனாளர்கள் – திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?

நொந்து போன aircel பயனாளர்கள் - திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?

கடந்த சில நாட்களாகவே ஏர்செல் நிறுவனத்தை பற்றி அரசல்புரசலாக செய்தி வெளியானது. அதற்கு காரணம் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது ஏர்செல் சிக்னல் கிடைக்காமல் இருந்ததே காரணம். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதுமே யாருக்கும் ஏர்செல் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் ஏர்செல் பயனாளிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். உஷார் பார்ட்டிகள் ஜியோவிற்கு தாவிவிட இன்று ஏர்செல் சிக்னலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாமான்ய மக்களே.

என்ன ஆனது ஏர்செல் நிறுவனம்?

போதிய டவர் பராமரிப்பு இல்லாமை, கடன் பிரச்சினை ஆகிய காரணங்களால் ஏர்செல் நிறுவனம் பெரிய நஷ்டத்துக்குள்ளாகி திவாலாகிவிட்டது. அதனால் ஏர்செல் பயனாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்பது தான் இன்று தமிழகம் முழுக்க பேசப்படும் டாபிக்.

அதே சமயம் ஏர்செல் நிறுவனத்தின் அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அதில், எதிர்பாராத சில பிரச்சினைகள் காலமாக தங்களுக்கு சேவை வழங்குவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.  பல வருடங்களாக பயனாளியாக இருந்து அன்பை பகிர்ந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். வீணான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்னும் சில   தினங்களில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு மீண்டும் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் தொடரும். அதற்குள் யாரும் MNP மூலமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. ஏர்செல் நம்பரிலிருந்து மற்றொரு நம்பருக்கு கால் டைவர்ட் செய்துகொள்ளவும். இதன் மூலம் உங்ஙளது இன்கமிங் கால் வசதியை தொடர்ந்து பெறலாம் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட இரண்டு தகவல்களில் எது உண்மை என்ற கேள்விக்கு இன்னும் சில தினங்களில் விடை கிடைக்கலாம்.

Related Articles

அப்டேட் ஆகுங்க அப்பாக்களே – குடிகா... தந்தையின் குடிப்பழக்கத்தை கண்டித்து கடிதம் எழுதி வைத்த பண்ணிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர் தினேஷ்  நெல்லை புறவழிச்சாலை ரயில்வே பாலத்தில் தூக்...
எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத... நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...
தர்பார் படத்தின் பலம் மற்றும் பலவீனங்கள்... TON தமிழ் என்ற எங்கள் பக்கத்தில் தர்பார் படத்தின் விமர்சனம் பதிவிட்டிருந்தோம். அதன் டைட்டில் "பர்ஸ்ட் ஆஃப் படுத்து தூங்கிட்டு செகண்ட் ஆஃப் மட்டும் பார...
பெண்களின் ஆடைகளை ஆண்கள் துவைப்பது, பயன்ப... சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. ரோஜாக்கூட்டம், சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களைத் த...

Be the first to comment on "நொந்து போன Aircel பயனாளர்கள் – திவாலாகிவிட்டதா ஏர்செல் நிறுவனம்?"

Leave a comment

Your email address will not be published.


*