போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

Mumbai woman waited in traffic for 2 hours and gave birth in auto

போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து
நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்றாக
ஆக்குவது. காலையில் கிளம்பி வேலைக்குச் செல்பவர்களே கூடப் போக்குவரத்து நெரிசலில்
சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அப்படியிருக்க நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கிட்டத்தட்ட
இரண்டு மணிநேரமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஜோதி கவுட், நிறைமாத கர்ப்பிணி. கடந்த சனிக்கிழமை
மாலை அவர் பிரசவ வலியை உணர்ந்து இருக்கிறார். தான் வசிக்கும் சமன்யா ருக்ஞாலயா
பகுதியில் இருந்து தனது பெற்றோர்களுடன் கிளம்பி, மருத்துவமனை அமைந்திருக்கும் மல்வானி
பகுதிக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். இந்த இரண்டு இடத்திற்கும் இடையே 1 கிலோமீட்டர்
தொலைவு மட்டுமே. ஆனால் மும்பையின் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக
குறித்த நேரத்திற்கு ஜோதியால் மருத்துவமனையைச் சென்றடைய முடியவில்லை.

இதன் காரணமாக தான் பயணம் செய்த ஆட்டோவிலேயே குழந்தையை பெற்றெடுத்தார் ஜோதி.

பிரசவம் ஆன கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை
அளிக்கப்பட்டது. தாயும் சேயும் தற்போது நலம்.

அந்தக் குழந்தைக்கு போக்குவரத்து நெரிசல் பற்றி யாரும் இனி சொல்லிக்கொடுக்க
தேவையில்லை.

Related Articles

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...
#TN_welcomes_XiJinping #GoBackModi என்று... சீன நாட்டை சேர்ந்த ஜின்பிங்கை வரவேற்கும் தமிழர்கள் #Gobackmodi என்று டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். 1.சீன ...
இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிரு... 2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25  நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெர...
உலகிலயே மிகப்பெரிய செல்போன் ஃபேக்ட்ரியை ... உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் உலகிலயே மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க இருக்கிறது சாம்சங் கம்பெனி.சாம்சங் நிறுவனத்தி...

Be the first to comment on "போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்"

Leave a comment

Your email address will not be published.


*