போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

Mumbai woman waited in traffic for 2 hours and gave birth in auto

போக்குவரத்து நெரிசல், பயணம் செய்பவர்கள் எவரும் விரும்பாதா ஒன்று. போக்குவரத்து
நெரிசலில் சிக்குவது என்பது அன்றைய ஒட்டுமொத்த நாளையே பதற்றம் நிறைந்த ஒன்றாக
ஆக்குவது. காலையில் கிளம்பி வேலைக்குச் செல்பவர்களே கூடப் போக்குவரத்து நெரிசலில்
சிக்கிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். அப்படியிருக்க நிறைமாத கர்ப்பிணி ஒருவர் கிட்டத்தட்ட
இரண்டு மணிநேரமாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஜோதி கவுட், நிறைமாத கர்ப்பிணி. கடந்த சனிக்கிழமை
மாலை அவர் பிரசவ வலியை உணர்ந்து இருக்கிறார். தான் வசிக்கும் சமன்யா ருக்ஞாலயா
பகுதியில் இருந்து தனது பெற்றோர்களுடன் கிளம்பி, மருத்துவமனை அமைந்திருக்கும் மல்வானி
பகுதிக்கு ஆட்டோவில் சென்றிருக்கிறார். இந்த இரண்டு இடத்திற்கும் இடையே 1 கிலோமீட்டர்
தொலைவு மட்டுமே. ஆனால் மும்பையின் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசலின் காரணமாக
குறித்த நேரத்திற்கு ஜோதியால் மருத்துவமனையைச் சென்றடைய முடியவில்லை.

இதன் காரணமாக தான் பயணம் செய்த ஆட்டோவிலேயே குழந்தையை பெற்றெடுத்தார் ஜோதி.

பிரசவம் ஆன கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை
அளிக்கப்பட்டது. தாயும் சேயும் தற்போது நலம்.

அந்தக் குழந்தைக்கு போக்குவரத்து நெரிசல் பற்றி யாரும் இனி சொல்லிக்கொடுக்க
தேவையில்லை.

Related Articles

65 வது தேசிய விருதுகள் அறிவிப்பு! –... 65ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்த வருடம் தமிழ்சினிமாவில் சில அறிமுக இயக்குனர்கள் " ந...
ஆரோக்யமாக எடை குறைக்க ஐந்து வகையான பானங்... இன்றையகாலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் அதிக எடை காரணமாக அவதிப் படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், அமைதியற்ற வாழ்க்கை முறை, சகிப்புத்தன்மையற்ற மன...
உசுப்பேத்துருவன்ட உம்முனும் கடுப்பேத்து... கடந்த சில தினங்களாகவே சர்கார் பட இசை வெளியீட்டு விழா குறித்தான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துகிறோம், ஒ...
உடுமலைப்பேட்டை கௌசல்யாவும் இந்த தமிழ் சம... உடுமலைப்பேட்டை கௌசல்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார் அந்த கணம் கணவரின் பெயர் சக்தி தற்போது அந்த சக்தி என்பவரிடமிருந்து...

Be the first to comment on "போக்குவரத்து நெரிசலால் ஆட்டோவிலேயே குழந்தையைப் பிரசவித்த பெண்"

Leave a comment

Your email address will not be published.


*