உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்

google may help you talk to AC's fans and more

இணையதள சந்தையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளக் கூகுள் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது நுகர்வோர் சாதனங்களுடன் கூகுள் நிறுவனத்தின் குரல் உதவியாளரை (Voice Assistant) இணைக்கும் பேச்சுவார்த்தையை இந்திய நிறுவனங்களுடன் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் வீட்டிலிருக்கும் குளிர்சாதன கருவி, மின்விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் ஸ்விட்சுகளை குரல் வழி கட்டளைகள் (Voice Commands) மூலம் கட்டுப்படுத்த முடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் தங்கள் சந்தாதாரர்களுக்கு குரல் உதவியாளர் சேவையை வழங்கும் திட்டத்தை பற்றியும் கூகுள் பேசி வருகிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் தங்களது பில்கள் மற்றும் மாதாந்திர திட்டங்களை தெரிந்துகொள்ள இயலும்.

இந்திய சந்தையில் கவனம்

இந்தியாவில் ஆண்ட்ராய்டு திறன்பேசி பயன்படுத்துபவர்களை மனதில் வைத்தே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. திறன்பேசி பயன்பாட்டாளர்களில் 98% பேர் ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். அமேசான் நிறுவனத்தின் எக்கோ குரல் உதவியாளருக்குப் போட்டியாகவே கூகுள் நிறுவனம் தனது குரல் உதவி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை (Voice Assistant Bluetooth Speakers) முன்பு அறிமுகப்படுத்தியது.

‘கூகுள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் இந்தியா மிகப்பெரிய சந்தை. இந்தியாவில் அதிக அளவில் ஆண்ட்ராய்டு திறன்பேசியை மக்கள் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் கூகுள் உதவியாளருக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது’ என்று தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் மற்றும் கூகிள் நிறுவனத்தில் வீட்டுப் பொருட்களின் பொது மேலாளர் ரிஷி சந்திரா தெரிவித்தார்.

‘ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை உருவாக்க நிறைய உள்ளூர் இந்திய உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து நாங்கள் மேலும் பணியாற்ற இருக்கிறோம். வீட்டிலுள்ள முக்கிய உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் நிறையக் குரல் செயலாக்கம் அடிப்படையில் உருவாக்கப்படும். இந்தியாவில் ஒரு பெரிய முதலீட்டைக் கூகுள் நிறுவனம் செய்யவிருக்கிறது’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஆர்வம் காட்டும் இந்திய நிறுவனங்கள்

கூகுள் எந்தெந்த இந்திய நிறுவனங்களுடன் பேசி வருகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஜியோமி, மைக்ரோமேக்ஸ் மற்றும் இன்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் நிறைய நுகர்வோர் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன.

‘தொலைக்காட்சிகளில் குரல் உதவியாளர் வசதி நிறுவப்பட்டிருக்கும் பட்சத்தில், சேனல் மாற்ற ரிமோட் தேவை இருக்காது. நுகர்வோர் தங்கள் குரல் வழி கட்டளைகளின் மூலமாகவே கூட சேனல்களை மாற்ற முடியும். தொலைக்காட்சியை ஆன் ஆப் செய்யக்கூடக் குரல் வழி கட்டளைகள் பயன்படுத்தலாம்’ என்று ரிஷி சந்திரா தெரிவித்தார்.

ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே குரல் உதவியாளர்களைப் பயன்படுத்தி வருகின்றன. தற்போது சந்தையில் அமேசான் எக்கோ மற்றும் கூகுள் ஸ்பீக்கர்கள் கிட்டத்தட்ட ஒரே விலையில் கிடைக்கின்றன.

இனி தனியாக பேசிக்கொள்பவர்களைப் பார்த்து யாரும் சிரிக்க முடியாது.

Related Articles

சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! R... 2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொ...
கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகி... இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா marginal cost of funds based lending rate (MCLR) எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட...
டெல்லி – மீரட் இடையே இந்தியாவின் ம... டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் மீரட்டுக்கு செல்லும் அதிவேக சாலை பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. 149 கிலோ மீட்டர்கள் தொலைவு உள்ள இந்த இ...
வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...

Be the first to comment on "உங்கள் வீட்டு மின் சாதனங்களுடன் பேசும் வசதியை அறிமுகம் செய்யவிருக்கிறது கூகுள்"

Leave a comment

Your email address will not be published.


*