கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட, உடனடியாக கைது பண்ணி சிறையில் அடைக்க வேண்டிய எஸ் வி சேகருக்கு போகும் இடம் எல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆளுநருக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் அவசரப் பட்டு பல துறைகளில் பணி ஆற்றி வரும் பெண்கள் எல்லாம் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து தான் முன்னேறிச் செல்கிறார்கள் என்று மகா பிற்போக்குத் தனமான பதிவு ஒன்றை எழுதிவிட்டு, அதை நான் சரியாகப் படித்து பார்க்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சமாளித்தார். அதனை நீதிபதிகள் உள்பட பெரிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மாறாக அவரை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று உத்தரவு இட்டார்கள். ஆனால் கைது செய்வதை பல மாதங்களாகத் தள்ளிப் போட்டு வருகிறது காவல் துறை.

கிரிஜா வைத்தியநாதன் எஸ்விசேகருடைய அண்ணி என்பதால் அவருடைய விரல் அசைவில் காவல் துறை இருப்பதாகப் பலரும் கருத்து காறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தல் கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் வந்த எஸ்விசேகரை பற்றியும் அதிகாரம் ஒரு குற்றவாளிக்கு எப்படி எல்லாம் துணை நிற்கிறது என்றும் சமூகவலை தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த மாதர் சங்கம் எல்லாம் இப்போது என்ன செய்கிறது, பெண் பத்திரிக்கையாளர்கள் ஏன் இன்னமும் மௌனம் காத்து வருகிறீர்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏன் அவரை கைது பண்ணாமல் இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையாவது காவல் துறை தெளிவாகக் கூற வேண்டும்.

Related Articles

உடல்நிலை சரியில்லாத போதும் ரயில் விபத்தை... பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற கடவுள் வருவாரா? என்பது சந்தேகம் தான். ஆனால் கடவுள் போல் வந்து காப்பாற்ற ஒரு சாமானியன் இருப்பான் என்பதற்கேற்ப கர்...
வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...
பெற்றோர்களே முதலில் நீங்கள் நிதானமாக இரு... முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு என்ற ஆபத்தில் இருந்து மாணவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அவருடைய இறப்பிற்கு பிறகு ஆளாளு...
கன்னியாகுமரி கிராமங்களில் வெள்ளத்தால் எட... மண்டைக்காடு புதூர், குறும்பனை, கொட்டில்படு, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, தூத்தூர் மற்றும் போத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் வீடுக...

Be the first to comment on "கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?"

Leave a comment

Your email address will not be published.


*