கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி பொதுமக்களை வீடு தேடி சென்று கைது செய்தது காவல் துறை. ஆனால் நீதிமன்றங்கள் குற்றவாளி என அறிவிக்கப் பட்ட, உடனடியாக கைது பண்ணி சிறையில் அடைக்க வேண்டிய எஸ் வி சேகருக்கு போகும் இடம் எல்லாம் பாதுகாப்பு அளித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆளுநருக்கு சப்போர்ட் பண்ணும் விதத்தில் அவசரப் பட்டு பல துறைகளில் பணி ஆற்றி வரும் பெண்கள் எல்லாம் பலருடன் படுக்கையைப் பகிர்ந்து தான் முன்னேறிச் செல்கிறார்கள் என்று மகா பிற்போக்குத் தனமான பதிவு ஒன்றை எழுதிவிட்டு, அதை நான் சரியாகப் படித்து பார்க்காமல் பகிர்ந்துவிட்டேன் என்று சமாளித்தார். அதனை நீதிபதிகள் உள்பட பெரிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மாறாக அவரை கைது செய்து உள்ளே அடைக்க வேண்டும் என்று உத்தரவு இட்டார்கள். ஆனால் கைது செய்வதை பல மாதங்களாகத் தள்ளிப் போட்டு வருகிறது காவல் துறை.

கிரிஜா வைத்தியநாதன் எஸ்விசேகருடைய அண்ணி என்பதால் அவருடைய விரல் அசைவில் காவல் துறை இருப்பதாகப் பலரும் கருத்து காறி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தல் கூட்டத்திற்கு காவல் துறை பாதுகாப்புடன் வந்த எஸ்விசேகரை பற்றியும் அதிகாரம் ஒரு குற்றவாளிக்கு எப்படி எல்லாம் துணை நிற்கிறது என்றும் சமூகவலை தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

இந்த மாதர் சங்கம் எல்லாம் இப்போது என்ன செய்கிறது, பெண் பத்திரிக்கையாளர்கள் ஏன் இன்னமும் மௌனம் காத்து வருகிறீர்கள் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏன் அவரை கைது பண்ணாமல் இருக்கிறோம் என்பதற்கான காரணத்தையாவது காவல் துறை தெளிவாகக் கூற வேண்டும்.

Related Articles

ஸ்லிம் சிவாஜியின் வடசென்னை படம் எப்படி இ... வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் இது. ரவுடிசம் சார்ந்த படம் என்பதால் புதுப்பேட்டை பாகம் இ...
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...  வரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது... 43வது சென்னை புத்தக திருவிழா 2020ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கியது. தொடங்கி வைக்க தமிழக முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி வந்தார். அடுத்த வருட புத்தக திர...
இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!... இன்று எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள். இளமையில் வறுமையில் வாட, அந்த வறுமையை போக்க நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். பிறகு தமிழ் சினிமாவில் சிறுசிறு...

Be the first to comment on "கைது பண்ண வேண்டிய எஸ்வி சேகருக்குப் பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்; தூத்துக்குடி போராளிகளை வீடு தேடி கைது செய்வது ஏன்?"

Leave a comment

Your email address will not be published.


*