வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

மும்பையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு இந்தியாவின் வானிலை திணைக்களத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள் .

அடுத்த 24 மணிநேர காலத்திற்குள் 200 மிமீ அல்லது அதிகமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. வானிலை துறை வகைப்பாட்டின் கீழ், 15.6 மிமீ  முதல் 64.4 மிமீ பதிவாகும்  மழை மிதமானது என்றும், 64.5 மிமீ முதல் 115.5 மிமீ  பதிவாகும் மழை கனமானது என்றும் , 115.6 மிமீ முதல் 204.4 மிமீ  வரை பதிவாகும் மழை மிக அதிகமானது என்றும்  மற்றும் 204.5 மி.மீ. வரை பதிவாகும் மழை மிக அதிக கனமழை என்றும் அழைக்கப்படுகிறது.

வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: ‘பரவலான மழைப்பொழிவு ஜூன் 10 ஆம் தேதி வரை தொடரும். இந்தக் கனமழை வெள்ளிக்கிழமை முதல் மும்பை உட்பட வடகிழக்கு கடற்கரை மற்றும்  மகாராஷ்டிராவுக்கும் செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்தப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்’.

 

மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்

ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் மழைப்பொழிவு தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் கூடுமானவரை வெளியே நடமாடுவதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வானிலை துறையின் மேற்கு பகுதி துணை இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிகர் தெரிவித்ததாவது ‘மழைக்காலம் தவிர, தென் கொங்கனிலிருந்து வடக்கு கேரளா வரை நீடிக்கும் மற்றுமொரு வானிலை அமைப்பின் காரணமாக மேற்கு கடற்கரையில் அதிக ஈரப்பதம் ஊடுருவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரண்டு வானிலை அமைப்புகளின் சங்கமத்தின் போது, அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

ஜூலை 2005 இல், நகரின் பெரும்பகுதி வெள்ளத்தால் சூழ்ந்தது , 24 மணி நேரமாகத் தொடர்ந்து பெய்த மழை 900 மில்லிமீட்டர் அளவுக்குப் பதிவானது. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர்.

கோவாவில் வியாழக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழை, மும்பையில் ஜூன் 10 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

Related Articles

2019ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதி மக்களு... அரவக்குறிச்சி தொகுதி என்றாலே ஓட்டுக்கு அதிகப் பணம் வாங்கும் தொகுதி என்று தான் எல்லோரும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு நற்பெயரை சம்பாதித்திருக்கிறது அரவ...
சாவுக்கிதார் என்றால் மக்கள் காவல்காரன் எ... சுதந்திர தின உரையின்போது, நான் இந்த நாட்டின் பிரதமர் அல்ல; தலைமை காவல்காரன் என்று குறிப்பிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.அதை அடுத்த கட்டத்திற்க...
இந்தியாவில் நிலவும் பிரச்சினைகளும் ̵...  குழந்தைத் தொழிலாளர்கள் –காக்கா முட்டை, குட்டி, வாகை சூடவா, மெரினா, கோலிசோடா, காதல் கொண்டேன், பாலாஜி சக்திவேல் படங்கள் – காதல், கல்லூரி, வழக்கு எண...
பள்ளி கல்லூரிகளில் எவிட்டாக்கள் தயாளன்கள... தமிழ் சினிமாவில் இதுவரை எப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாம் காண்பித்து இருக்கிறார்கள் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். 1. தங்க மீன்கள் தங்க மீன்கள் எவிட...

Be the first to comment on "வார இறுதியில் மிக அதிக கனமழை மும்பையில் பெய்யக்கூடும் – மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்"

Leave a comment

Your email address will not be published.


*