பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்

வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் , சுற்றுச்சூழலை யாராலும் காப்பாற்ற இயலாது’ என்று பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்துப் பேசிய வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன்பேன் பட் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களிலும், ரயில்வே டிராக்குகளிலும் பாட்டிலைத் தூக்கியெறிந்துவிட்டு செல்வதற்குப் பதிலாக, இந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஐந்து ரூபாய் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

புனே, அகமதாபாத், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் இதே போன்ற இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.

Related Articles

பெரிய நடிகர்கள் சுயநலமா இருக்காங்க ̵... பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்துபிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவற்றின் சில கேள்விகளும் பத...
இந்தியாவின் கூகுள் பாய் ! – அற்புத... இந்தியாவின் கூகுள் பாய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் கௌடில்யா பண்டிட். எந்த துறையிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும் நொடியில் பதிலளிக்கும்...
கிராமத்துக் குழந்தைகளின் கல்விக்காக ஒன்ப... திரைப்படங்களில் நமது கனவு நாயகன் எப்போதும் கல்விக்காக உழைப்பவர் தான். கல்வியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் கணிசமான வெற்றியைப் பெற்றிர...
இன்ஜினியரிங் படிப்பிற்கும் பொது நுழைவுத்... மே, ஜூன், ஜூலை இந்த மூன்று மாதங்களில் ரிசல்ட், தற்கொலை, நீட், கவுன்சிலிங், ஆன்லைன் கவுன்சிலிங் சரிவரவில்லை போன்ற வார்த்தைகள் தான் அடிபட்டுக் கொண்டிருக...

Be the first to comment on "பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்"

Leave a comment

Your email address will not be published.


*