பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்

வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் , சுற்றுச்சூழலை யாராலும் காப்பாற்ற இயலாது’ என்று பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்துப் பேசிய வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன்பேன் பட் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களிலும், ரயில்வே டிராக்குகளிலும் பாட்டிலைத் தூக்கியெறிந்துவிட்டு செல்வதற்குப் பதிலாக, இந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஐந்து ரூபாய் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

புனே, அகமதாபாத், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் இதே போன்ற இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.

Related Articles

கிறுக்கத்தனமான கிகி சேலஞ்ச்! – பப்... அது என்ன கிகி சேலஞ்ச்! உலகில் உள்ள பைத்தியங்கறை அரவேக்காட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்த கிகி சேலஞ்ச்! இப்போது உலகம் முழுக்க டிரெண்டாகி வ...
குடியிருப்பு பகுதிகளில் காரை நிறுத்தவும்... தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் திறந்த வெளியில் மக்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த  இனி கட்டணம் வசூலிக்கப்பட்ட இருக்கிறது டெல்லியில்....
ஆர்யாவின் கண்கள் இரக்கமற்றது? ஏன் தெரியு... இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா அவர்களின் படத்தில் அறிமுகமாகி பிறகு இயக்குனர் விஷ்ணு வர்தனின் அறிந்தும் அறியாமலும் படத்தில் மறு அறிமுகமானவர் நடிக...
தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்கள் வெக... புத்தகத் திருவிழா என்றாலே தீவிர புத்தகப் பிரியர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். காரணம் தங்கtளுக்கு பிடித்த புத்தகங்களை சிறப்பு தள்ளுபடி விலையில...

Be the first to comment on "பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்"

Leave a comment

Your email address will not be published.


*