பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்

வதோதரா ரயில்வே நிலையத்தில் பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் தவறானது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் , சுற்றுச்சூழலை யாராலும் காப்பாற்ற இயலாது’ என்று பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தைத் திறந்து வைத்துப் பேசிய வதோதரா நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜன்பேன் பட் தெரிவித்தார்.

ரயில் நிலையங்களிலும், ரயில்வே டிராக்குகளிலும் பாட்டிலைத் தூக்கியெறிந்துவிட்டு செல்வதற்குப் பதிலாக, இந்த இயந்திரத்தில் செலுத்தினால் ஐந்து ரூபாய் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

புனே, அகமதாபாத், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் இதே போன்ற இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.

Related Articles

ராட்சசி திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... * பள்ளிக் கூடமா அது... சந்தக்கட... எங்க பாத்தாலும் குப்ப... இரைச்ஙாலு... ஆட்டுமந்தைய திறந்துவிட்ட மாதிரி... படிக்கற புள்ளைக இந்த வயசுலயே ஜாதிப் பேர சொ...
அரசியல் லாபகரமாக இல்லாத போது, அலுப்புத் ... ரஷ்ய புத்தகங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை மாக்சிம் கார்க்கியின் புத்தகங்கள் தான். அவருடைய கட்டுரைகள் சிறுகதைத் தொகுப்புகள் நாவல்கள் பல உலகின் ...
விரைவில் வருகிறது மளிகைக்கடை அண்ணாச்சிகள... தொட்டதெற்கெல்லாம் ரோபோக்கள் வந்துவிட்டன. பாட்டுப்பாட ரோபோ, பரிமாற ரோபோ, தூங்கவைக்க ரோபோ என்று ரோபோக்கள் பலவிதம். பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காட...
தண்ணீர் பஞ்சத்திற்கு மூன்று ஆண்டுகளாகப் ... மத்திய பிரதேசம் டிகாம்கர் பகுதியில் அமைந்திருக்கும் கிராமம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் அந்தக் கிராமத...

Be the first to comment on "பிளாஸ்டிக் நொறுக்கும் இயந்திரத்தில் பாட்டிலை போட்டால் ஐந்து ரூபாய்"

Leave a comment

Your email address will not be published.


*