விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?

தமிழ்சினிமா வரலாற்றில் முதல்முறையாக   நாற்பத்தி ஒரு நாட்கள் வேலை நிறுத்தம்  நடந்தது. சினிமாவை மட்டுமே நம்பி இருந்த பலதரப்பட்ட அன்றாட தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டார்களே தவிர அவர்களின் எண்ணம் மட்டும் நிறைவேறவே இல்லை. இன்னமும் கியூப் நிறுவனம் தான் படத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

வேலை நிறுத்தம் நடந்தததால் பல படங்களின் படபிடிப்பும் ரிலீசும் தள்ளிப்போனது. எனினும் ஏர்.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் தயாராகி வரும் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்தது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியதால் சில நாட்களில் அந்தப் படபிடிப்புக்கும் தள்ளிப்போனது. அதே போல அப்போதே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போனது. அதில் மிக முக்கியமான படங்கள் என்றால் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி, விஷாலின் இரும்புத்திரை மற்றும் ரஜினிகாந்தின் காலா படங்களைக் குறிப்பிடலாம். இந்த மூன்று படங்களுமே சமீபத்தில் தமிழகத்தில் நிலவும் பதட்டாமான பரபரப்பான சூழல்களுக்கு உகந்த படம் என்றே சொல்லலாம்.

ஆனால் அவற்றில் காலா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தான் பெரும்பாலான காட்சிகள் வந்து உள்ளது. ஆக இந்தப் படம், முதல்முதலில் சொன்ன ரிலீஸ் தேதியான ஏப்ரல் 27ல் வெளியாகி இருந்திருந்தால் தூத்துக்குடி சம்பவம் அப்படியே மாறி இருந்தாலும் மாறி இருக்கலாம். ஆனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ரஜினிகாந்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுக்கு மிகப்பெரிய பலவீனமாகச் சென்றுவிட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரை பார்த்து நலம் விசாரிக்கச் செல்கிறேன் என்ற பெயரில் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்ளும் விதமாகச் சில வார்த்தைகளை அள்ளி வீசிவிட்டார். இது அப்படியே மக்களுடைய உணர்வுகளுக்கு எதிரானதாக மாறிவிட, இப்போது காலா ஒரு முரண்பட்ட படமாகத் தான் எல்லோராலும் பார்க்க முடிகிறது.

ஏப்ரல் 27 ல் ரிலீசாகி இருந்தால், அண்ணா மற்றும் எம்ஜிஆர் கூட்டணியில் நடந்ததுபோல திரை வடிவம் மூலமாக அரசியல் பேசி ரஜினி  வெகுஜன மக்களை கவர்ந்து உள்ளார் என்றும், ரஜினிக்கு உண்மையிலயே நல்ல அரசியல் அறிவு இருக்கிறது என்றும் பலரும் பாராட்டி இருப்பார்கள்.

இப்போது ஆடிட்டர் குருமூர்த்தியோ, ரஜினி இது போன்ற படங்களை தவிர்த்திருக்க வேண்டும் என்று கருத்துக் கூறி இருக்கிறார். அதனை மறுத்து ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதைத் தான் தவிர்க்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Related Articles

தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கு... ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது.  இந...
நான்கு முறை தங்கம் வென்ற மாரத்தான் வீராங... தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இது போன்ற உலக அள...
உங்கள் வாழ்க்கையைச் சுற்றி எத்தனை விசாரண... விசாரணை, உறியடி இந்த இரண்டு படங்களுமே மிக சின்ன படங்கள். ஆனால் வீரியமான கதைக்களம் கொண்ட படங்கள். "அதிகாரத்தை எதிர்த்து கேள்வி எழுப்புதல்" என்பது தான் ...
நியூசிலாந்தைப் போலவே தமிழகத்திலும் ஒரு ச... கணினி அறிவியலில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை செயற்கை நுண்ணறிவு. டெர்மினேட்டர், பவர் ரேஞ்சர்ஸ் மற்றும் பேசஞ்சர்ஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்...

Be the first to comment on "விஷால் தலைமையில் நடந்த சினிமா ஸ்ட்ரைக் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் ரஜினியின் நிலைமை வேறுதானே?"

Leave a comment

Your email address will not be published.


*