நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது – திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் !

tripura cm Biplab Kumar Deb

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்தது என்று கூறி சர்ச்சையை உண்டாக்கியவர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி உள்ளார். வாத்துக்கள் நீந்தும் நீர்நிலையில் ஆக்சிஜன் தாமாகவே உயரும் என திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ருத்ரசாகரில் பாரம்பரியப் படகுப் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிப்லப் தேப், அழகான இயற்கைக் காட்சியை உருவாக்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த மற்றும் கிராமத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த நீர் நிலைகளை ஒட்டி வாழும் கிராம மீனவர்களுக்காக ஐம்பது ஆயிரம் வெண்ணிற வாத்துக் குஞ்சுகளை அரசு விநியோகிக்கப் போவதாக தெரிவித்தார்.

புதிய சர்ச்சை:

வாத்துக்கள் நீந்தும் நீர்நிலை சுத்திகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் தாமாக உயர்ந்து அதை சுவாசிக்கும் மீன்கள் இயற்கையான முறையில் விரைவாக வளரும் எனவும்  பிப்லப் தேப் கூறியுள்ளார். நீரில் அசைவுகள் இருந்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும், ஆனால், அது நீந்தும் வாத்துக்களால் கிடைக்கும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் மறுத்துள்ளனர். அதே சமயம் இந்தக் கருத்தை பலர் ஆதரித்தும் வருகின்றனர்.

Related Articles

செந்தில்பாலாஜி vs செந்தில் நாதன் –... வருகிற மே 19ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு  கூட்டம் கூட்டுதல் பணப்பட்டுவாடா செய்தல் போன்ற பணி...
குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படு... நாகரீக சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் மற்றும் குழந்தைப் பேறை தள்ளி போட்டு தங்களது எதார்காலத்தை தொலைத்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் ...
தல அஜித் பற்றிய 48 தகவல்கள்!... கடந்த மே 1ம் தேதி அஜீத்துக்கு 48 வது பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் கொண்டாட பட்டது. 48 வயதான அவரைப் பற்றிய 48 தகவல்கள்! தன்னை தேடி வர...
அசீஃபா பானுவின் மரணத்துக்கு நீதி வழங்கப்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்துக்கு உட்பட்ட ரசானா என்ற கிராமத்தில் பக்கர்வால் என்ற நாடோடி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி அச...

Be the first to comment on "நீர்நிலைகளில் வாத்துகள் நீந்துகையில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது, அதனால் மீன்கள் பெருக்கமும் அதிகரிக்கிறது – திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் !"

Leave a comment

Your email address will not be published.


*