வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” கவிதை தொகுப்பு ஒரு பார்வை!

A view on Thiruthi Ezhuthiya Theerpugal by Vairamuthu

இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1979ல் நடந்துள்ளது. இதுவரை இருபத்திமூன்றாம் பதிப்புகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இந்தப் புத்தகம் தான் வைரமுத்துவிற்கு பாடலாசிரியர் வாய்ப்பு வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் புத்தகத்திலிருந்து சில கவிதைகள் : 

  1. உறைக்குள் இருந்தால் தான் அதற்கு வாள் என்று பெயரா? 
  2. குருவிகள் 

தொலைக்காட்சிக் கோபுரத்தில் கூடுகட்டுவதால் மட்டுமே 

திரையிலுங்கூடத் தெரியுமா என்ன? 

  1. முள்ளை முள்ளால் எடுப்பது 

முன்னோர் வழிதான்! 

ஆனால்

கண்ணுக்குள் விழுந்த முள்ளுக்கு 

அந்தப் 

பழைய தத்துவம் பயன்படுமா?

  1. பொய்க்கு எப்போதும் 

முரசடித்தே பழக்கம்

உண்மை எப்போதும் 

புல்லாங்குழல் வாசிப்பதே வழக்கம். 

  1. ஆகாயத்தில் 

வானவில்லுக்கு அடித்த

வர்ணம்

காய்ந்து விட்டதா என்று

தொட்டுப் பார்க்க

எம் விரல் நீள்வதில்லை

ஏழையின் 

கண்ணீரைத் துடைத்துக் 

காயவைக்கத்தான் 

பத்து விரல்களும்

படபடக்கின்றன…

  1. ‘பாவம் மனைவி’

இந்த

இல்லறக் கிரிக்கெட்டில்

கட்டிலறைக்கும் 

சமையலறைக்கும் 

ரன்கள் எடுத்தெடுத்தே

ரணமாய்ப் போனாள். 

  1. மனைவியின் புன்னகை 

திருவோட்டையும் 

ஒரு

மகுடமாய் மாற்றிவிடும்;

அவள் கண்ணீரோ 

மகுடத்தையும் 

ஒரு

திருவோடாய் மாற்றிவிடும். 

  1. கல்லெல்லாம் 

சிற்பமான பூமியில் தான்

சிற்பம் போன்ற செல்வியரெல்லாம்

கல்லாகி ஆகியே காலங்கழித்தார்கள்!

  1. கதிரவன் மரணம் கூடக்

கண்ணுக்கு அழகுதான்

செத்தாலும் மேன்மக்கள்

மேன்மக்களே

  1. வானம் ஒரு நூலகம்

இன்னும்

வாசகர் தேவை

  1. சுதந்திர 

வெளிச்சம்…

சேரியில்

விழாமல்…

மாளிகை

நிழல்களே…

மறைத்து

விட்டன…

தலைப்புகள் : 

  1. திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  2. நடத்துங்கள்
  3. வித்தியாச அன்னங்கள்
  4. அந்தி
  5. வெயில் மறைவுப் பிரதேசங்கள்
  6. உறக்கம் கலைவதெப்போ? 

மயக்கம் தெளிவதப்போ?

  1. இலக்கிய விபத்து
  2. உரைப்பதற்கு ஒன்றுண்டு
  3. விலக்கி வைக்கப்பட்டவர்கள்
  4. வடுகப்பட்டி முதல் பெரியகுளம் வரை
  5. வீடுபேறு
  6. பாரதி நினைக்கப்படுகிறான்
  7. அது ஒரு கல்வெட்டு
  8. ஒப்பந்தம்
  9. செவிடன் காதில்
  10. ஒரு பிரளயம் உசுப்பாமலா
  11. தன்மானம்
  12. பாலுக்கும் காவல்
  13. பாரதிதாசன் – ஒரு பார்வை
  14. இலையுதிர் காலம்
  15. கம்பனுக்கு ஒரு கேள்வி
  16. நான் காதலுக்காக வழக்காடுகிறேன்
  17. ராத்திரி விழிக்கட்டும்
  18. பேச்சு வியாபாரி
  19. நீ கிளையல்ல கீற்று
  20. நட்சத்திரங்கள்
  21. அது எந்தத் தை?
  22. நிறமொருநாள் சிவக்கும்
  23. காத்திருப்பு
  24. மன்னிப்பு பரிகாரமல்ல
  25. இயற்கையோடு இயைந்த வாழ்வு
  26. என்னை உனக்குள் தேடிய போது
  27. கணக்குப் பார்க்கையில்
  28. மரபு மாறவில்லைதானே
  29. தேர்தல் வாக்குறுதிகள்
  30. நம்பலாம்
  31. மெழுகுவத்தி
  32. கிளிஞ்சல்
  33. கண்ணீர் மருந்தாமோ? 
  34. ஊகித்துக் கொள்ளுங்கள்
  35. எதார்த்தம்
  36. அவன் கலைமகளுக்குப் பாடஞ் சொல்லுகிறான்
  37. ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் 

என்ற தலைப்புகளின் கீழ் அற்புதமான பல கவிதைகளை படிக்கலாம். இந்த புத்தகத்தின் விலை ரூ 85 மட்டுமே. 

Related Articles

உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகாரி... உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னல் தாக்கி ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் . ஆறு பேர் காயமடைந்தனர்.நேற்று இரவு உன்னாவ் மாவட்டத்தின்...
உலகின் தலைசிறந்த சொல் செயல் – வேலை... சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நீ மாறாத... உனக்கேத்த மாதிரி சூழ்நிலையவே மாத்து... இந்த உலகத்துல கொடுமையான விஷியம் ரெண்டு.      ...
அப்துல்கலாம் பெயரை வைத்து அரசியல் செய்யா... மற்றவரின் புகழை வைத்து அரசியலை செய்வது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. எங்கள் ஆட்சி, அண்ணா ஆட்சி என்றும் , எம்.ஜி.ஆர் ஆட்சி என்றும், காமராசரை மிஞ்சிய ஆட்ச...
இத இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது̷... சூதுகவ்வும் திரைப்படம் வெளியாகி இன்றோடு (01-05-2013) ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. நலன் குமாரசாமி, ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரும் கதை எழுதி உள்ளனர். நயன்தார...

Be the first to comment on "வைரமுத்துவின் “திருத்தி எழுதிய தீர்ப்புகள்” கவிதை தொகுப்பு ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*